December 6, 2025, 10:25 AM
26.8 C
Chennai

எஸ்பிஐ தரும் அசத்தல் திட்டம்!

SBI
SBI

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது.

அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் தங்க வைப்புத் திட்டம் (Gold Deposit Scheme). இந்த திட்டத்தை வங்கி ஒரு புதிய அவதாரத்தில் (R-GDS) அறிமுகம் செய்துள்ளது. இது நிலையான தங்க வைப்புத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் தாங்கள் வைத்துள்ள தங்கத்தை மட்டுமே டெபாசிட் செய்தால் போதும். அந்த தங்கத்திற்கு பதிலாக வங்கி அதிக வட்டி அளிக்கிறது. இதில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

SBI-யின் தங்க வைப்புத் திட்டத்தில் இரட்டை நன்மைகள் உள்ளன. முதலில், உங்கள் தங்கத்தை வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கியின் பொறுப்பாக இருக்கும். அதே நேரத்தில், அதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கவும் முடியும்.

பொதுவாக, வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கம் வங்கிகளில் அப்படியே இருப்பதாக நினைகிறார்கள். ஆனால், இந்த திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட தங்கத்தின் மூலம் வருவாயும் ஈட்டலாம். இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்திய ஸ்டேட் வங்கியின் புதுப்பிக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டம் (R-GDS) மூலம் தங்கத்தைக் கொண்டு வருவாய் ஈட்ட வழி கிடைக்கிறது. வங்கியில் வைக்கும் தங்கத்திற்கு (Gold) வட்டி கிடைக்கும்.

இருப்பினும், இந்த திட்டத்திற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர் வங்கியில் குறைந்தது 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும். தங்கத்தை டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை.

எஸ்பிஐயின் தங்க வைப்புத் திட்டத்தின் கீழ் 3 வகையான ஆப்ஷன்கள் உள்ளன. குறுகிய கால வங்கி வைப்பு, நடுத்தர கால அரசு வைப்பு மற்றும் நீண்ட கால அரசு வைப்பு.

குறுகிய கால வங்கி வைப்புகளில், தங்கம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை வைக்கப்படும். நடுத்தர கால அரசு வைப்புத்தொகையில், 5 முதல் 7 ஆண்டுகள் வரை வைப்பு செய்யப்படுகிறது. நீண்ட கால அரசு வைப்புத்தொகையில் தங்கம் 12 முதல் 15 ஆண்டுகளுக்கு வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது.

குறுகிய கால வங்கி வைப்புத்தொகையில், 1 முதல் 2 வருடங்களுக்கு 0.55 சதவிகிதம் வட்டி கிடைக்கும். 2 முதல் 3 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 0.60 சதவிகிதம் வட்டி (Interest) கிடைக்கும். நடுத்தர காலத்தில், தங்கத்தின் மீது 2.25 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். நீண்ட கால அரசு வைப்பில் தங்கத்தை வைத்திருப்பதற்கு 2.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் எஸ்பிஐயின் எந்தவொரு அருகிலுள்ள கிளையிலும் தங்கத்தை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ், தங்கத்துடன், வாடிக்கையாளர்கள் தங்கள் KYC யை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு, நீங்கள் எஸ்பிஐ வலைத்தளமான https://www.sbi.co.in/portal/web/personal-banking/revamped-gold-deposit-scheme-r-gds ஐப் பார்வையிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories