December 6, 2025, 3:01 AM
24.9 C
Chennai

புதிய வைரஸால் 13 மாணவர்கள் பாதிப்பு!

hospital - 2025

நோரா வைரஸ் என்ற புது வைரஸ் தற்போது இந்தியாவில் தனது பாதிப்பைத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே கொரோனா வைரஸால் ஏற்பட்ட மிகவும் மோசமான பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், புதிய வைரஸ் தொற்று பாதிப்பு கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது

கேரளாவின் வயநாட்டில் பூக்கோடு கிராமத்தில் கால்நடை கல்லூரி மாணவர்கள் 13 பேர் நோரோ வைரஸ் (NoroVirus) பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், அங்கு மற்றுமொரு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நோரா வைரஸ் என்றால் என்ன? அதிலிருந்து எப்படி பாதுகாப்பது? என்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்துக் கொண்டால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த புதிய வைரஸ், விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் வைரஸ் என்றும், சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரில் பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

பூக்கோடு கிராமத்தில் 13 மாணவர்கள் நோரா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். விலங்குகளில் இருந்து பரவுவதாக சொல்லப்படும் இந்த வைரஸ், கால்நடை மருத்துவ மாணவர்களை பாதித்திருக்கிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவத் தொடங்கினால், பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகும். இந்த வைரஸ் அறிகுறியுடன் மேலும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோரா வைரஸ்க்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால் அச்சம் அதிகரிக்கிறது. துரிதமாக பரவும் தன்மையுள்ள நோரா வைரஸ் பாதிப்பினால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் இந்த வைரஸ், தாக்கியதில் இருந்து அது 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே வாழ்ந்தாலும், இரைப்பை மற்றும் குடல் நோயை ஏற்படுத்திவிடும்.

முதியவர்கள், குழந்தைகள், மற்றும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோரா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அச்சம் அதிகரித்துள்ளது. கொரோனாவைப் போலவே, எச்சில் மற்றும் தொடுதல் மூலமாக நோரா வைரஸ் பாதிக்கும் என்பதால், அதிக கவனம் அவசியம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விலங்குகளின் கழிவுகளின்மீது அமரும் கொசுக்கள் மூலமே மனிதர்களுக்கு இந்த வகை வைரஸ் அதிகமாகப் பரவுகிறது. நோரா வைரஸ் பாதித்தவர்களுக்கு, வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைசுற்றுதல், வயிற்று வலி, காய்ச்சல் ஏற்படுகிறது.

வாந்தி, பேதியாகும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால், பாதிக்கப்பட்டவர்கள், திரவ பானத்தை உண்ணவேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு நன்றாக கழுவி பயன்படுத்தவேண்டும். நோய் பாதித்தவர்கள் மூலம், விரைவாக நோரா வைரஸ் பரவும் என்பதால், வாந்தி பேதி போன்ற உடல் நலக்குறைவு ஏற்படுபவர்கள், முடிந்த அளவு தனிமையில் இருப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories