நல்ல மனிதனாக இப்படி தான் இருக்க வேண்டும்.. அஜித்தை பார்த்து கற்றுக் கொண்டேன்: கார்த்திகேயா!

ajith8 1
ajith8 1

வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா ‘வலிமை’ படம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார்.

யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ பொங்கலையொட்டி வரும் நிலையில் கார்த்திகேயா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “முதலில் அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பை நினைத்து அதிர்ச்சியடைந்தேன். எச்.வினோத் சாருக்கோ அல்லது அஜித் சாருக்கோ என்னைத் தெரியும் என்று எனக்குத் தெரியாது.

இருவரும் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள். நான் தெலுங்கில்தான் ஆரம்பித்தேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் வலிமை பைக் ரைடிங் படம் இல்லை. படத்தில் பைக் துரத்தல் காட்சிகள் உள்ளன. முழுக்க முழுக்க இது ஒரு வித்தியாசமான ஆக்‌ஷன் திரைப்படம்.

karthikeya
karthikeya

படத்தின் செட்டில் அஜித் சாரை முதன்முதலாக சந்தித்தபோது அவரிடம் என்ன சொல்வது, இவ்வளவு பெரிய நடிகரை எப்படி அணுகுவது, மொழித் தடை என பல சந்தேகங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ஆனால், அஜித் சாரின் சிறந்த அம்சம், படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரையும் எப்படி உணர வைக்கிறார் என்பதுதான், முக்கியமானது. அவர், என்னை நடத்திய விதம் நானே படத்தின் ஹீரோ என்ற உணர்வை ஏற்படுத்தியது. படப்பிடிப்புக்கு வந்ததும் அனைத்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களையும் வாழ்த்தி, எல்லோரிடமும் நல்ல விஷயங்களைச் சொல்லி, மொத்த யூனிட்டையும் முக்கியமானதாக உணர வைப்பார்.

இது படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் உரிமையுணர்வைக் கொடுத்து அதையொட்டி, அவர்கள் படத்திற்கு தங்களால் இயன்றதைத் தருகிறார்கள். ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்று அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Entertainment News

Popular Categories