திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது..

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை சேர்ந்தவர் நிகில் ( 23). அப்பகுதியை சேர்ந்த நீனு, சரஸ்வதி ஆகியோர் திருவனந்தபுர அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு டாக்டர் உடையணிந்து வாலிபர் வந்தார். அவர் மேற்கண்ட 2 பெண்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுத்து உள்ளார். மேலும் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக எடுத்து சென்று, அதன் முடிவை கொண்டு வந்து கொடுத்தார். மருத்துவ பரிசோதனை செய்ததாக கூறி 2 பெண்களிடம் வாலிபர் பணம் பெற்று உள்ளார். இந்தநிலையில் நீனு, சரஸ்வதி ஆகிய 2 பேரின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக தலைமை டாக்டர் வந்தார். பெண்கள் சிகிச்சை பெற்று வரும் படுக்கைகளில் இருந்த குறிப்பு அட்டையை பார்த்த போது, அதில் சில மருத்துவ குறிப்புகள் தவறாக குறிக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்.

அதில் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த வாலிபர் போலி டாக்டர் நிகில் என்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்ட வெளிப்புற போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் 2 பெண்களிடம் மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி ரத்தம் மாதிரி சேகரித்ததும், அதற்காக பணம் பறித்ததும் தெரியவந்தது. மேலும் அதிக நோயாளிகள் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் உடையில் வந்து 10 நாட்களாக சிகிச்சை அளிப்பதாக உலா வந்து உள்ளார்.

தொடர்ந்து பிளஸ்-2 வரை படித்த போலி டாக்டர் நிகிலை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

704737 fake doctor - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories