சென்னையில் மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் ..

1744991 pinkcus - 2026

மகளிர் இலவச பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்தன. இதனால் சென்னையில் மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மாநகராட்சிகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினர். ஆனாலும் மாநகர பஸ்கள் அனைத்தும் ஒரே நிறத்தில் இயங்கியதால் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் இருந்து சாதாரண பஸ்களை அடையாளம் காண்பதில் பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

எனவே பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களுக்கு ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்று ஏற்கனவே மாநகராட்சி அறிவித்தது. அதன்படி இலவச பஸ்களில் முன்புறமும், பின்புறமும் ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டது. மீதமுள்ள இரு பக்கவாட்டு இடங்களும் செலவு கட்டுப்பாடுகள் காரணமாக அப்படியே விடப்பட்டன. முதல்கட்டமாக 50 பஸ்களுக்கு ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டது. இந்த பஸ்களை சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே ‘பிங்க்’ நிறம் பூசப்படும் என்பதை பெரும்பாலான பெண்கள் அறியவில்லை. மேலும் பிங்க் நிறம் பூசப்பட்ட பஸ்கள் பார்ப்பதற்கு தோற்றம் நன்றாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து மகளிர் இலவச மாநகர பஸ்கள் முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. இதற்காக ‘பிங்க்’ நிறம் பூசப்பட்ட பஸ்களின் இருபுறமும் பக்கவாட்டில் பிங்க் நிறத்துடன் ஒரே மாதிரியாக தோன்றும் வகையில் விளம்பரத்துக்கு வாடகைக்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகர பஸ்களின் பக்கவாட்டு பகுதியில் நிறுவனங்கள் வாடகை செலுத்தி விளம்பரம் செய்யலாம். இந்த விளம்பரங்களுக்கு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘பிங்க்’ நிற பஸ்கள் ஒரே நிறத்தில் முழுவதும் காட்சியளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories