கேரளா-பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு குழந்தை..

Tamil News large 3233968 - 2026

கேரளாவில் அதிசயமாக ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைக்கும், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிக்கும் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியா பவல் (21). ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. இதே மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி வசித்து வந்த இவ்விருவரும் காதல்வயப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள், மற்றவர்களைப்போல தாங்களும், தங்கள் பெயர் சொல்ல ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். இவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றனர். பெண்ணாக இருந்து ஆணாக ஜஹாத் மாறியபோதும், அவரது கருப்பை அகற்றப்படாததால் அவர் கருத்தரிப்பது சாத்தியம் என டாக்டர்கள் தெரிவித்து, உரிய ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். தொடர்ந்து மருத்துவ ஆலோசனையும் பெற்று வந்தார். இந்த நிலையில் சமீபத்தில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாங்கள் பெற்றோராக போகிற தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. குழந்தை பிறந்தது இந்த நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஜஹாத்துக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இது குறித்த தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர். ஆனால் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சொல்ல தம்பதியர் மறுத்துவிட்டனர். “எங்கள் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாங்கள் இப்போது பொதுவெளியில் கூற விரும்பவில்லை” என அவர்கள் கூறி விட்டனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொண்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.

பஞ்சாங்கம் மார்ச் 2 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

நிர்வாகம் சார்பில் அவருக்கு திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருக்கல்யாண அலங்கார படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. 

T20 WC 2026: அரை இறுதியில் இந்திய அணி!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு போட்டிகளின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது குறித்து முடிவு எட்டின.

பஞ்சாங்கம் மார்ச் 2 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மார்ச் 23ல் துவக்கம்

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஸ்ரீகோவிலில்...

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

Entertainment News

Popular Categories