December 8, 2025, 8:29 AM
22.7 C
Chennai

கேரளா அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்ட தாய்-மகன் ..

500x300 1833974 keralabomb - 2025

கேரளா அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்ட தாய்-மகனை போலீசார்‌ கைது செய்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அவரது வீட்டில் சோதனை நடத்தி 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.

கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெயர், முகவரி எதுவும் இல்லாமல் ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். ஆனால் அங்கு குண்டு இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை யார் அனுப்பியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கேமிராவில் பதிவாகி இருந்த வாலிபர் மற்றும் பெண் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபோன்று பல்வேறு இடங்களில் குண்டு வைத்ததாக வந்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ய இடங்களில் இவர்கள் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அதிகரிக்கவே அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கொல்லம் அருகே உள்ள பத்தாப்புறத்தை சேர்ந்தவர் கொச்சு தெரசா(வயது62) மற்றும் அவரது மகன் சாஜன்(33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்டது நாங்கள் தான் என ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், கொச்சு தெரசா அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வரும் பென்ஷனை வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே தான் அவர்களுக்கு வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்படி செய்வதன் மூலம் போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் மோப்பநாய்கள் மூலம் சோதனை போடுவார்கள். அப்படி நடக்கும் போது, அந்த இடத்திற்கு சென்று, அதனை பார்ப்போம். அப்போது எங்களுக்குள் ஒருவித ஆனந்தம் ஏற்படும். இதனால் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 50க்கும் மேற்பட்ட மொட்டை கடிதங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories