December 8, 2025, 1:48 PM
28.2 C
Chennai

இந்து பட்டியலின சமுதாயத்துக்கு துரோகம் இழைத்த ஸ்டாலின்!

mkstalin - 2025

இந்து பட்டியலின சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் திமுக அரசு என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக சட்டபேரவையில் கிறித்துவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அறிவித்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் இட ஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை மதமாற தூண்டும் சதிகளுக்கு துணைபோக தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உயர்ந்த சிந்தனைக்கு செய்யும் துரோகம்.

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அப்பட்டமாக கிறித்துவ, முஸ்லிம்களின் ஊதுகுழலாக செயல்படுகிறது. இந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

கிறித்துவ கல்வி நிறுவனங்கள் மக்களின் வரி பணத்தில் நடத்தப்படுகிறது. ஆனாலும் மாநில அரசின் இட ஒதுக்கீடுகள் அமல்படுத்துவது இல்லையே ஏன்? கிறித்துவ கல்வி நிறுவனங்கள் அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த மசோதா கொண்டுவருவாரா தமிழக முதல்வர்?

சமூகத்தில் தாங்கள் முன்னோர்கள் பட்ட அவமானங்கள், கஷ்டங்களை ஏற்று இந்துவாக தன்மானத்தோடு வாழ்ந்த பட்டியலின முன்னோர்களின் தியாகத்திற்கு தரும் சலுகை பட்டியலினம் இழந்து விடக்கூடாது. தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து போராட பட்டியிலின சமூக மக்களும் அமைப்புக்களும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.

சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துக்களை திரட்டி ஜனநாயக ரீதியில் போராடியும் இந்து முன்னணி மதம்மாறிய கிறித்துர்களுக்கு தமிழக அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது என தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

Topics

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Entertainment News

Popular Categories