காரைக்குடி வேண்டாம்; தாம்பரம் விடுங்க! பயணியர் கூக்குரல்!

train - 2026
#image_title

பயணிகளே இல்லாமல் காலி பெட்டியுடன் ஓடும் ரயில் குறித்து பயணியர் குரல் எழுப்பியுள்ளனர். இந்த ரயிலை காரைக்குடிக்கு விடுவதற்கு பதிலாக தாம்பரத்துக்கு விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

எர்ணாகுளம்-காரைக்குடி சபரி சிறப்பு ரயில் குறித்து தான் இந்த பிரச்சினை. இது வியாழன் தோறும் இயக்கப்படுகிறது நேற்று இந்த ரயிலில் வெறும் 20 பயணிகளே பயணித்துள்ளனர்

கடந்த வருடம் சபரி ஸ்பெஷல் என எர்ணாகுளம் தாம்பரம் இடையே இயக்கப்பட்ட ரயிலுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. எனவே இந்த முறையில் அதுபோல் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

ஆனால் தென்னக ரயில்வே அதிகாரிகள் காரைக்குடி எர்ணாகுளம் சிறப்பு ரயில் என அறிவித்தார்கள். அதுவும் பொருத்தம் இல்லாத நேரத்தில் ஒரே நாளில் சென்று வரும் வகையில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் வியாழன் நேற்று முதல் இயங்கியது. ஆனால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் துணியும் வரவேற்பு இல்லை. இந்த ரயிலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு நிலவரம்
SL- 05 3AC- 0 2AC-0 என இருந்த நிலையில் வண்டி வியாழன் காலை 04:45 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த ரயில் புனலூர் வந்த போது அங்கிருந்து பயணிகள் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்து கூக்குரல் எழுப்பினர். காரைக்குடிக்கு இங்கிருந்து யார் செல்கிறார்கள் எங்களுக்கு அதற்கான தேவை என்ன தாம்பரம் அல்லது சென்னைக்கு இந்த ரயிலை விட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதுபோல் காரைக்குடி-எர்ணாகுளம் சபரி சிறப்பு ரயில் முன்பதிவு நிலவரம் இரு நாட்களுக்கு முன்னர் வரை SL-03 3AC-0 2AC-0 என்று இருந்தது.

வண்டி வியாழன் இரவு 23:30 மணிக்கு காரைக்குடியில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.டிக்கெட் புக்கிங் ஓபன் 4 நாள் ஆகிவிட்டது என்றபோதும் இந்த ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

இந்த Empty ரயில் இன்னும் 5 வாரங்களுக்கு ஓடும். கடந்த ஆண்டு இந்த ரயில் எர்ணாகுளம் தாம்பரம் இடையே ஓடியது அதிக பயணிகள் பயணித்தனர்.

தற்போது இந்த எர்ணாகுளம் காரைக்குடி ரயில் நாளை ஓடுமா ?எவ்வளவு பண விரயம்? இதெயெல்லாம் தென்னக ரயில்வே அதிகாரிகள் தங்களின் சொந்த காசை போட்டு ஓட்டுவார்களா?. என்றெல்லாம் பயணிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலர் கே எச் கிருஷ்ணன் ரயில்வே அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில் இந்த ரயிலை மீண்டும் தாம்பரத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories