காரைக்குடி வேண்டாம்; தாம்பரம் விடுங்க! பயணியர் கூக்குரல்!

train - 2026
#image_title

பயணிகளே இல்லாமல் காலி பெட்டியுடன் ஓடும் ரயில் குறித்து பயணியர் குரல் எழுப்பியுள்ளனர். இந்த ரயிலை காரைக்குடிக்கு விடுவதற்கு பதிலாக தாம்பரத்துக்கு விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

எர்ணாகுளம்-காரைக்குடி சபரி சிறப்பு ரயில் குறித்து தான் இந்த பிரச்சினை. இது வியாழன் தோறும் இயக்கப்படுகிறது நேற்று இந்த ரயிலில் வெறும் 20 பயணிகளே பயணித்துள்ளனர்

கடந்த வருடம் சபரி ஸ்பெஷல் என எர்ணாகுளம் தாம்பரம் இடையே இயக்கப்பட்ட ரயிலுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. எனவே இந்த முறையில் அதுபோல் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

ஆனால் தென்னக ரயில்வே அதிகாரிகள் காரைக்குடி எர்ணாகுளம் சிறப்பு ரயில் என அறிவித்தார்கள். அதுவும் பொருத்தம் இல்லாத நேரத்தில் ஒரே நாளில் சென்று வரும் வகையில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் வியாழன் நேற்று முதல் இயங்கியது. ஆனால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் துணியும் வரவேற்பு இல்லை. இந்த ரயிலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு நிலவரம்
SL- 05 3AC- 0 2AC-0 என இருந்த நிலையில் வண்டி வியாழன் காலை 04:45 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த ரயில் புனலூர் வந்த போது அங்கிருந்து பயணிகள் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்து கூக்குரல் எழுப்பினர். காரைக்குடிக்கு இங்கிருந்து யார் செல்கிறார்கள் எங்களுக்கு அதற்கான தேவை என்ன தாம்பரம் அல்லது சென்னைக்கு இந்த ரயிலை விட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதுபோல் காரைக்குடி-எர்ணாகுளம் சபரி சிறப்பு ரயில் முன்பதிவு நிலவரம் இரு நாட்களுக்கு முன்னர் வரை SL-03 3AC-0 2AC-0 என்று இருந்தது.

வண்டி வியாழன் இரவு 23:30 மணிக்கு காரைக்குடியில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.டிக்கெட் புக்கிங் ஓபன் 4 நாள் ஆகிவிட்டது என்றபோதும் இந்த ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

இந்த Empty ரயில் இன்னும் 5 வாரங்களுக்கு ஓடும். கடந்த ஆண்டு இந்த ரயில் எர்ணாகுளம் தாம்பரம் இடையே ஓடியது அதிக பயணிகள் பயணித்தனர்.

தற்போது இந்த எர்ணாகுளம் காரைக்குடி ரயில் நாளை ஓடுமா ?எவ்வளவு பண விரயம்? இதெயெல்லாம் தென்னக ரயில்வே அதிகாரிகள் தங்களின் சொந்த காசை போட்டு ஓட்டுவார்களா?. என்றெல்லாம் பயணிகள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலர் கே எச் கிருஷ்ணன் ரயில்வே அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதில் இந்த ரயிலை மீண்டும் தாம்பரத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories