திருப்பதி அர்ச்சகரின் சன் டிவி., பேட்டியை திரித்து பரப்பும் திருட்டு திக., ஊடகவாதிகள்..!

tirupati ramana deekshitalu - 2026

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு, அண்மையில் தேவஸ்தானத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப் படுத்தி ஆந்திராவிலும் தமிழகத்திலும் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அதன் பின்னர், தேவஸ்தானம் ரமண தீட்சிதலு உள்ளிட்ட பரம்பரை அர்ச்சகர்கள் சிலருக்கு கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பியது.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, விசாரணை செய்து தங்கள் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்யாமல், குற்றச்சாட்டு கூறுபவர்களை பதவி நீக்கி வீட்டுக்கு அனுப்பும் அயோக்கியத்தனம், தனியார் அலுவலகங்களில் தான் என்று இல்லாமல், அரசு சார் தேவஸ்தானத்திலும் இறை சந்நிதியிலும் நடைபெற்றிருப்பது பக்தர்கள் மனத்தில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பணம் கொழிக்கும் திருப்பதி தேவஸ்தானத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல, பத்து ரூபாய் உண்டியலில் போடும் ஒவ்வொரு பக்தரும் தட்டிக் கேட்கும் உரிமை உள்ள விஷயமும் கூட!

அது போல் திருப்பதி பெருமாள் மிகுந்த பக்தி கொண்ட தலைமை அர்ச்சகர், அங்கே நடக்கும் முறைகேடுகளைக் கண்டு மனம் வெதும்பி, தன் எதிர்காலம் இந்த பண வெறி அரக்கர்களின் ஆட்சியில் இப்படித்தான் ஆகும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, உயிர் மீதான அச்சத்தையும் துறந்து முறைகேடுகளை வெளிப்படுத்தினார். அது குறித்து சன் டிவி.,யில் இருந்து நிருபர் ராஜா திருவேங்கடம், ரமண தீட்சிதலுவிடம் மிக அழகாக ஒரு பேட்டி கண்டு, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பதிவு செய்தார்.

ஆனால், ஆன்மிக நடைமுறைகளின் மீது மிகுந்த காழ்ப்பு கொண்டு, ஆலய வருமானங்களைக் கொள்ளை அடிக்கவே அறநிலையத்துறையை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு, தங்களுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் அதிகாரிகளையே நியமித்து ஆலய சொத்துகளை அபகரித்துக் கொண்டிருக்கும் திருட்டு திராவிட கழகங்களின் அடிவருடிகள் எப்படி பொய்களால் இயங்குவர் என்பதை அவர்களின் செயல் எடுத்துக் காட்டியுள்ளது.

சன் டிவி.,யின் இந்த பேட்டியை எடுத்து, ஆங்காங்கே கட்  காபி செய்து ரமண தீட்சிதலுவை கேவலப் படுத்தியதுடன், அர்ச்சகர்கள் அனைவரையுமே இழிவுபடுத்தி  வருகிறார்கள். இது குறித்து நேர்மையாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டி வருகிறார்கள். பலரும் எடிட் செய்யப்பட்டு துர்பிரசாரம் செய்யும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கூடவே, எடிட் செய்யப்படாத மூல விடியோவையும் பகிர்ந்து, நாத்திக கும்பலின்  நாசகார வேலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் கருத்துகளில் ஒரு கருத்து இது…

திருப்பதி தலைமை அர்ச்சகர் பேசிய கட் செய்த வீடியோவை பார்த்து தவறான புரிதல் கொண்டு எல்லாரும் திட்டுகிறார்கள்…!!

தயவு செய்து முழு வீடியோவையும் இருக்கிறது எல்லாரும் பாருங்க.

திருப்பதியின் தலைமை அர்ச்சகரின் இந்த பேச்சு ஏழுமலையானின் மீது அவரின் பக்தி மிகவும் வணக்கத்துக்குரியது.

தமிழகத்து நாத்திக வெறியர்களின் சூழ்ச்சி….. கட் செய்த வீடியோவை உலகமெங்கும் பரப்பி தன் அரிப்பை போக்கிக் கொண்டார்கள். தூயபக்தி கொண்ட அந்த தலைமை அர்ச்சகரின் உண்மையான பேட்டியை நீங்களே பாருங்க.

தமிழகமே இப்படித்தான் “ஐம்பது வருடமாக தி.க நாத்திகரின் பொய் பரப்புரைகளை நம்பி”…., ஏமாந்து கொண்டிருக்கிறது.. பிஜேபி கட்சி திருப்பதி தலைமை அர்ச்சகரின் இந்த கருத்துக்களுக்கு பேராதரவு தருவதால் …,

கட் செய்த வீடியோவை வெளியிட்டு மக்களை முட்டாளாக்கியது திருட்டு தி.க ஊடக குரூப். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்…!!

வென்றது தர்மம்.

Courtesy: Sun TV., (Interview By Raja Thiruvenkatam)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories