திருப்பதி அர்ச்சகரின் சன் டிவி., பேட்டியை திரித்து பரப்பும் திருட்டு திக., ஊடகவாதிகள்..!

tirupati ramana deekshitalu - 2026

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு, அண்மையில் தேவஸ்தானத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப் படுத்தி ஆந்திராவிலும் தமிழகத்திலும் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார். அதன் பின்னர், தேவஸ்தானம் ரமண தீட்சிதலு உள்ளிட்ட பரம்பரை அர்ச்சகர்கள் சிலருக்கு கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்பியது.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, விசாரணை செய்து தங்கள் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்யாமல், குற்றச்சாட்டு கூறுபவர்களை பதவி நீக்கி வீட்டுக்கு அனுப்பும் அயோக்கியத்தனம், தனியார் அலுவலகங்களில் தான் என்று இல்லாமல், அரசு சார் தேவஸ்தானத்திலும் இறை சந்நிதியிலும் நடைபெற்றிருப்பது பக்தர்கள் மனத்தில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பணம் கொழிக்கும் திருப்பதி தேவஸ்தானத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல, பத்து ரூபாய் உண்டியலில் போடும் ஒவ்வொரு பக்தரும் தட்டிக் கேட்கும் உரிமை உள்ள விஷயமும் கூட!

அது போல் திருப்பதி பெருமாள் மிகுந்த பக்தி கொண்ட தலைமை அர்ச்சகர், அங்கே நடக்கும் முறைகேடுகளைக் கண்டு மனம் வெதும்பி, தன் எதிர்காலம் இந்த பண வெறி அரக்கர்களின் ஆட்சியில் இப்படித்தான் ஆகும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, உயிர் மீதான அச்சத்தையும் துறந்து முறைகேடுகளை வெளிப்படுத்தினார். அது குறித்து சன் டிவி.,யில் இருந்து நிருபர் ராஜா திருவேங்கடம், ரமண தீட்சிதலுவிடம் மிக அழகாக ஒரு பேட்டி கண்டு, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பதிவு செய்தார்.

ஆனால், ஆன்மிக நடைமுறைகளின் மீது மிகுந்த காழ்ப்பு கொண்டு, ஆலய வருமானங்களைக் கொள்ளை அடிக்கவே அறநிலையத்துறையை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு, தங்களுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் அதிகாரிகளையே நியமித்து ஆலய சொத்துகளை அபகரித்துக் கொண்டிருக்கும் திருட்டு திராவிட கழகங்களின் அடிவருடிகள் எப்படி பொய்களால் இயங்குவர் என்பதை அவர்களின் செயல் எடுத்துக் காட்டியுள்ளது.

சன் டிவி.,யின் இந்த பேட்டியை எடுத்து, ஆங்காங்கே கட்  காபி செய்து ரமண தீட்சிதலுவை கேவலப் படுத்தியதுடன், அர்ச்சகர்கள் அனைவரையுமே இழிவுபடுத்தி  வருகிறார்கள். இது குறித்து நேர்மையாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் உள்ளக் குமுறலைக் கொட்டி வருகிறார்கள். பலரும் எடிட் செய்யப்பட்டு துர்பிரசாரம் செய்யும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, கூடவே, எடிட் செய்யப்படாத மூல விடியோவையும் பகிர்ந்து, நாத்திக கும்பலின்  நாசகார வேலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் கருத்துகளில் ஒரு கருத்து இது…

திருப்பதி தலைமை அர்ச்சகர் பேசிய கட் செய்த வீடியோவை பார்த்து தவறான புரிதல் கொண்டு எல்லாரும் திட்டுகிறார்கள்…!!

தயவு செய்து முழு வீடியோவையும் இருக்கிறது எல்லாரும் பாருங்க.

திருப்பதியின் தலைமை அர்ச்சகரின் இந்த பேச்சு ஏழுமலையானின் மீது அவரின் பக்தி மிகவும் வணக்கத்துக்குரியது.

தமிழகத்து நாத்திக வெறியர்களின் சூழ்ச்சி….. கட் செய்த வீடியோவை உலகமெங்கும் பரப்பி தன் அரிப்பை போக்கிக் கொண்டார்கள். தூயபக்தி கொண்ட அந்த தலைமை அர்ச்சகரின் உண்மையான பேட்டியை நீங்களே பாருங்க.

தமிழகமே இப்படித்தான் “ஐம்பது வருடமாக தி.க நாத்திகரின் பொய் பரப்புரைகளை நம்பி”…., ஏமாந்து கொண்டிருக்கிறது.. பிஜேபி கட்சி திருப்பதி தலைமை அர்ச்சகரின் இந்த கருத்துக்களுக்கு பேராதரவு தருவதால் …,

கட் செய்த வீடியோவை வெளியிட்டு மக்களை முட்டாளாக்கியது திருட்டு தி.க ஊடக குரூப். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்…!!

வென்றது தர்மம்.

Courtesy: Sun TV., (Interview By Raja Thiruvenkatam)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories