December 5, 2025, 3:47 PM
27.9 C
Chennai

பெயர் மாற்றப்பட வேண்டிய நகரங்கள்! மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மார்கண்டேய கட்ஜு!

katju - 2025

உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் அலகாபாத் நகரின் பெயரை பிரக்யாராஜ் என்று மாற்றியுள்ளார். மொகலாய அரசன் அக்பர், 1575 ஆம் ஆண்டில் இந்த நகரின் பெயரை பிரயாகை என்று இருந்ததை அலகாபாத் என்று மாற்றினார். இப்போது அலகாபாத் மறுபடியும் “பிரயாக்ராஜ்” ஆக மாறியுள்ளது.

இதை அடுத்து, நமது வேதங்கள் மற்றும் பல புராணங்களிலும் வழங்கப்பட்டு வந்த பல்வேறு பெரிய புனித நகரங்களின் பெயர்களும் பழையபடி மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து ஒரு பெரிய பட்டியலையே அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலைப் படித்து கொஞ்சம் சிரிப்பு வந்தால், அதற்கு மார்கண்டேய கட்ஜுவே பொறுப்பு! காரணம் குசும்பு கேலி கிண்டல் இவற்றை எல்லாம் சேர்த்தே கருத்தை விதைப்பவர் மார்க்கண்டேய கட்ஜு. அவற்றில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் இருக்கும். ஆனால் குசும்பு கூடவே இருக்கும்!

மார்க்கண்டேய கட்ஜு பரிந்துரைக்கும் பெயர் மாற்ற நகரங்களின் பட்டியல் இதுதான்…

1. அஹமதாபாத் – அஷ்டவக்ராநகர்
2. அஹ்மத் நகர் – ஆங்கீரஸ்புர்
3. அடிலாபாத் – அவந்திபுர்
4. ஔரங்காபாத் – அலக்னிரஞ்சன்புர்
5. ஆக்ரா – அகஸ்த்யநகர்
6. அலிகார் – அருண்ஜெட்லேநகர்
7. பெஹ்ராம்புர் – பங்கேபிஹரிநகர்
8. போபால் – ராஜபோஜ்பால்
9. புலண்ட்ஷாஹ்ர்- பஜ்ரங்க்பலிபுர்
10. ஃபரிதாபாத் – யோகிஆதித்யநாத் நகர்
11. பிரோஸாபாத் – அமித்ஷா நகர்
12. ஃபரூகாபாத் – நரேந்திரமோடிநகர்
13. பதேபூர் – ராம் மாதவபுர்
14. காஜியாபுர் – கனேஷ்புர்
15. காஜியாபாத் – கடோட்கஜ் நகர்
16. ஹாஜிபுர்- ஹஸ்தினாபுர்
17. ஹமீர்புர் – ஹரேகிருஷ்ணாநகர்
18. ஹைதராபாத்- ஹிரன்யகசிபுவத்நகர்
19. ஹாசரிபாக் – ஹண்டியா பாப நகர்
20. ஜமல்புர் – ஜெய்மினிபுர்
21. கரீம்நகர் – க்ரிஷ்ணகனையாநகர்
22. மஹ்பூப்நகர் – மீராபாய் நகர்
23. மிர்ஸாபுர் – முரளிமனோகர் நகர்
24. மொரதாபாத் – மன்கிபாத் நகர்
25. முஸாபர்புர் – மண்தட்பதரிதர்சன்கோநகர்
26. முஸாபர்நகர் – மாதவாசார்யநகர்
27. நிஜாமாபாத் – நாரதமுனி நகர்
28. ஓஸ்மனாபாத் – ஓம் மணிபத்மே ஹம் நகர்
29. பதான்கோட் – பரீக்‌ஷித்புர்
30. செகந்தராபாத் – சதிசாவித்ரிநகர்

இப்படி மார்கண்டேய கட்ஜு எந்த எந்த நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என 30 நகரங்களின் பட்டியலைக் கொடுத்துள்ளார். ஆனால், அவற்றின் புராதன பெயர்களை மீட்டெடுத்து அவற்றுக்குச் சூட்ட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என்பது மட்டும் உண்மை. கேலி கிண்டலுக்காக, ஆட்சியாளர்களின் பெயர்களைச் சூட்டச் சொல்லி இவர் பரிந்துரைத்தாலும், இந்த 30 நகரங்களின் பட்டியலை பரிசீலிக்க வேண்டியது அரசுகளின் கடமைதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories