December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

பட்டியல் சமூகத்தவரை நீதிபதி ஆக்கியது திமுக.,வா? பொய்யர் வைகோ!

01 June01 vaiko - 2025

உயர்நீதிமன்றத்தில் முதன்முதலில் பட்டியல் சமூகத்தவரை நீதிபதியாக்கியது திமுகதான், கலைஞர்தான் என்று புதிய தலைமுறையில் பேட்டிக்கொடுத்த வைகோ கூறியிருக்கிறார். இது உண்மையல்ல. வடிகட்டின பொய்.

இந்த நிகழ்வைப் பற்றி அப்போதே ஆங்கிலத்தில் தி.பெ.கமலநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். இப்போது அந்நூல் தமிழிலும் கிடைக்கிறது. அவர் எழுதுகிறார் :

…இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் நீதிபதி வரதராஜன் செசன்ஸ் நீதிபதிக்குரிய அந்தஸ்தில் நீதிமன்றங்களின் பணிவரம்பு நிர்ணயக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். அடுத்த பதவி உயர்வு இயல்பாகவே உயர்நீதிமன்ற நீதிபதி பதவியே.

நீதிபதி வரதராஜன் மிகக் கீழ்மட்டத்திலுள்ள மாவட்ட நீதிபதி என்ற நிலையிலிருந்து செசன்ஸ் நீதிபதியெனும் அந்தஸ்துக்கு தம்மைத் தாமே உயர்த்திக் கொண்டவர். எந்தவொரு கறையுமில்லாதிருந்த அவரது பணி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன வட்டத்தில் பணி மூப்புள்ள நீதிபதியின் வாய்ப்பு வந்தது. அவ்வேளையில் நீதிபதி வரதராஜன் பதவி உயர்வுக்கான விளிம்பில் இருந்தார். நீதிபதி வரதராஜனின் பெயர் பணிமூப்புள்ள நீதிபதிகளின் பட்டியலிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்டது.

அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் திமுக கட்சி அதிகாரத்திலிருந்த்தென்பது வெறும் தற்செயல் நிகழ்வேயாகும். முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் குடியரசுத் தலைவரால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்காகத் தலைமை நீதிபதி அளிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் தந்து அப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் தங்களிடம் அந்தக் கோப்பு வந்தவுடனேயே தங்களது முத்திரையை அதில் இட்டிருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்தார்களா? நீதிபதி வரதராஜனைத் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையத்தின் ஒரு உறுப்பினராக்கிட திமுக முயற்சி செய்தது. நீதிபதி வரதராஜன் தமது இசைவினைத் தந்திட மறுத்துவிட்டார். பின்னர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மூலமாகவும் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை அவரும் நிராகரித்தார். நீதிபதி வரதராஜன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவது ஆறு மாதங்களாகத் தாமதப்படுத்தப்பட்டது.

இதுதான் நடந்தது. இவற்றை மறைத்துவிட்டு ஏதோ அவர் திமுக ஆட்சியால்தான் – திராவிட இயக்கத்தவரால்தான் உயர்நீதிமன்ற நீதிபதியானார் என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கித்தனமாகும்.

  • ம.வெங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories