February 22, 2026, 10:16 AM
26.1 C
Chennai

நம்மால் இப்படி பைசா செலவில்லாமல் ரூ.5 ஆயிரம் கோடியை ஆட்டயப் போட முடியுமா?!

sonia - 2026

நேஷனல் ஹெரால்ட் மோசடி … படித்துப் பாருங்கள். நம்மால் இப்படி பைசா செலவில்லாமல் ரூ. 5 ஆயிரம் கோடியை ஆட்டையப் போட முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஓர் உண்மை உங்களுக்குப் புரியும்!

நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் நேருவால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.

நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன.

2000-ல், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப் பட்டது.

இதன் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் தான்.

கடன் ஆனதால், நேஷனல் ஹெரால்டை, யங் இந்தியா என்னும் நிறுவனத்துக்கு விற்க, மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்தனர்.

இதில் மகா கேவலம் என்னவென்றால், யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே!

யங் இந்தியா லிமிடெட், நேஷனல் ஹெரால்டின் 90 கோடி கடனைத் தீர்ப்பது என்றும், அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டின் 5000 கோடி சொத்துக்களை யங் இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதாகவும் தான் ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தை யங் இந்தியாவுக்காக அதன் இயக்குநர் மோதிலால் வோராவே, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவுடன் செய்து கொண்டது தான் வேடிக்கை. (நீங்கள் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சிரிக்கக் கூடாது!)

யங் இந்தியா, கடன் 90 கோடியை அடைக்க, காங்கிரஸ் கட்சியிடம் கடன் கேட்கிறது. இதற்காக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே (!!!) கலந்து கொள்கின்றனர்.

மோதிலால் வோரா தான் காங்கிரஸுக்கும் பொருளாளர். அவர் காங்கிரஸ் பொருளாளராக இருந்து 90 கோடிக் கடனை யங் இந்தியாவுக்குக் கொடுத்து, அவரே யங் இந்தியாவுக்காக அதனைப் பெற்று, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவிடம் கொடுக்கிறார். (மறுபடியும் சிரியுங்கள்)

மறு நாள், சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில், நேஷனல் ஹெரால்ட் தேச விடுதலைக்கு (!!!) செய்துள்ள சேவைக்குப் பரிசாக, அது கொடுக்க வேண்டிய 90 கோடி கடனை ரத்து செய்வதாக தெரிவிக்கப் படுகிறது!

இப்போது நேஷனல் ஹெரால்டின் கடன் அடைந்து விட்டது. அதன் 5000 கோடி சொத்து யங் இந்தியா லிமிடெட் க்கு சேர்ந்து விட்டது.

சரி! யங் இந்தியாவின் 36 % பங்கு சோனியாவுக்கும், இன்னொரு 36 % பங்கு ராகுலுக்கும் சொந்தம். மீதமுள்ள 28% பங்கு, மோதிலால் வோராவுக்கும், ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கும் சொந்தம். எனவே 5000 கோடி சொத்து அலுங்காமல், குலுங்காமல், இவர்கள் கைக்கு வந்து விட்டது.

டில்லியில் பகதூர் ஷா ஸஃபர் மார்கில் உள்ள 11 மாடிக் கட்டிடம் ஒரு காலத்தில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தம்.

இப்போது அது இவர்களது யங் இந்தியா கைக்கு வந்து விட்டது. இதில் தான் பாஸ்போர்ட் அலுவலகமும், வேறு சில அலுவலகங்களும் இருக்கின்றன.

நம்மால் இப்படி ‘ரூம் “ போட்டு யோசித்து , ஒரு பைசா செலவில்லாமல் 5000 கோடி சொத்தை அடைய முடியுமா? இனியும் இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால்..!!!! 

  • யாரோ..?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories