December 5, 2025, 6:07 PM
26.7 C
Chennai

நம்மால் இப்படி பைசா செலவில்லாமல் ரூ.5 ஆயிரம் கோடியை ஆட்டயப் போட முடியுமா?!

sonia - 2025

நேஷனல் ஹெரால்ட் மோசடி … படித்துப் பாருங்கள். நம்மால் இப்படி பைசா செலவில்லாமல் ரூ. 5 ஆயிரம் கோடியை ஆட்டையப் போட முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஓர் உண்மை உங்களுக்குப் புரியும்!

நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் நேருவால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.

நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன.

2000-ல், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப் பட்டது.

இதன் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் தான்.

கடன் ஆனதால், நேஷனல் ஹெரால்டை, யங் இந்தியா என்னும் நிறுவனத்துக்கு விற்க, மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்தனர்.

இதில் மகா கேவலம் என்னவென்றால், யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே!

யங் இந்தியா லிமிடெட், நேஷனல் ஹெரால்டின் 90 கோடி கடனைத் தீர்ப்பது என்றும், அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டின் 5000 கோடி சொத்துக்களை யங் இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதாகவும் தான் ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தை யங் இந்தியாவுக்காக அதன் இயக்குநர் மோதிலால் வோராவே, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவுடன் செய்து கொண்டது தான் வேடிக்கை. (நீங்கள் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சிரிக்கக் கூடாது!)

யங் இந்தியா, கடன் 90 கோடியை அடைக்க, காங்கிரஸ் கட்சியிடம் கடன் கேட்கிறது. இதற்காக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே (!!!) கலந்து கொள்கின்றனர்.

மோதிலால் வோரா தான் காங்கிரஸுக்கும் பொருளாளர். அவர் காங்கிரஸ் பொருளாளராக இருந்து 90 கோடிக் கடனை யங் இந்தியாவுக்குக் கொடுத்து, அவரே யங் இந்தியாவுக்காக அதனைப் பெற்று, நேஷனல் ஹெரால்ட் இயக்குநர் மோதிலால் வோராவிடம் கொடுக்கிறார். (மறுபடியும் சிரியுங்கள்)

மறு நாள், சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில், நேஷனல் ஹெரால்ட் தேச விடுதலைக்கு (!!!) செய்துள்ள சேவைக்குப் பரிசாக, அது கொடுக்க வேண்டிய 90 கோடி கடனை ரத்து செய்வதாக தெரிவிக்கப் படுகிறது!

இப்போது நேஷனல் ஹெரால்டின் கடன் அடைந்து விட்டது. அதன் 5000 கோடி சொத்து யங் இந்தியா லிமிடெட் க்கு சேர்ந்து விட்டது.

சரி! யங் இந்தியாவின் 36 % பங்கு சோனியாவுக்கும், இன்னொரு 36 % பங்கு ராகுலுக்கும் சொந்தம். மீதமுள்ள 28% பங்கு, மோதிலால் வோராவுக்கும், ஆஸ்கர் பெர்னாண்டஸுக்கும் சொந்தம். எனவே 5000 கோடி சொத்து அலுங்காமல், குலுங்காமல், இவர்கள் கைக்கு வந்து விட்டது.

டில்லியில் பகதூர் ஷா ஸஃபர் மார்கில் உள்ள 11 மாடிக் கட்டிடம் ஒரு காலத்தில் நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தம்.

இப்போது அது இவர்களது யங் இந்தியா கைக்கு வந்து விட்டது. இதில் தான் பாஸ்போர்ட் அலுவலகமும், வேறு சில அலுவலகங்களும் இருக்கின்றன.

நம்மால் இப்படி ‘ரூம் “ போட்டு யோசித்து , ஒரு பைசா செலவில்லாமல் 5000 கோடி சொத்தை அடைய முடியுமா? இனியும் இவர்களிடம் நாட்டைக் கொடுத்தால்..!!!! 

  • யாரோ..?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories