December 6, 2025, 9:11 AM
26.8 C
Chennai

கூட்டணி பலம்.. யாரை நம்பி யாரு இருப்பது?!

vote1 - 2025

இணைய திமுக காரர்கள் இந்த முறையும் புள்ளிவிவரக் கணக்கோடும் வரலாற்றோடும் தீவிர உணர்வோடும் பேசி, மீண்டும் கோட்டை விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம், அவரை உள்ள விட்டது தப்பு, இவரை விட்டது தப்பு, துரோகிகள் அது இதுன்னு பிலாக்கணம் வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் திரும்ப முதலில் இருந்து துவங்குவார்கள் என நினைக்கிறேன்.

ஸ்டாலின் இவர்களை நம்பி இருக்கிறாரா அல்லது இவர்கள் ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறார்களா என்பதெல்லாம் கட்சியின் வெளியில் இருக்கும் யாருக்கும் புரியாத புதிர்.

பாவம் ஸ்டாலின். எல்லாம் சரியாக வரும்போது, பாஜக + பாமக + அதிமுக + தேமுதிக என்று கூட்டணி அமைவது பெரிய சவால்தான். (இப்போதும் என் பார்வையில் திமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றாலும், திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்ற கட்டத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரேயே வந்துவிட்டது திமுகவுக்கு பெரிய பின்னடைவுதான்.) அதிலும் மதிமுக திமுகவோடு இருப்பது கூடுதல் சாபம்.

அதிமுக இல்லாத பாஜக அணி கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் 18.5% வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி தொடராமல் போனதும் மக்கள் நலக் கூட்டணி வந்ததும் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த பெரிய விபத்து. [அதிலும் திமுகவே பலி!]

இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா?!) மக்கள் உண்மையான அதிமுகவாகக் கருதமாட்டார்கள் என்ற தோற்றமே வருகிறது. இது எல்லாமே பாஜக கூட்டணிக்கு நல்லதைத் தரலாம்.

எப்படியோ, திமுகவுக்கு மிரட்டலைத் தரவாவது ஒரு கூட்டணி உருவானது நல்லது. இல்லையென்றால் லட்டு மாதிரி திமுக வென்று தொலைத்திருக்கும். எடப்பாடி, ஓபிஎஸ் – நிதர்சனத்தைப் புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியவர்கள்

இன்றைய நிலையில்: பாஜக அதிமுக தேமுதிக பாமக, புதிய தமிழகம் கூட்டணி அமைந்தால்: 10 இடங்களில் வெல்லும். திமுக 20 இடங்களில் வெல்லும். மற்றவை இழுபறி என்று தோன்றுகிறது. ஆனால் உச்சகட்ட பிரசாரத்தில் பாஜக கூட்டணி பெரிய அளவில் முந்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

  • எழுத்தாளர் ஹரன் பிரசன்னா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories