நெல்லையில் கந்து வட்டிக்கு தொழிலுக்கு ஆப்பு; உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை….!

silpa 2 - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்களை அளிக்க கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

கந்து வட்டி பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் 9629711194 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இந்த எண்ணில் பெறப்படும் புகார்களும், நேரில் பெறப்படும் புகார் மனுக்களும், அந்தந்த பகுதி தாசில்தார் மற்றும் போலீஸ் நிலையத்துக்கு உடனடி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அவர்கள் புகார்கள் குறித்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் வட்டித் தொழில் செய்வோர், வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தாசில்தாரிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு உரிமம் பெறாமல் வட்டித்தொழில் செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகார் மையம் தவிர மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் அலுவலரின் 0462-2576265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories