December 6, 2025, 7:07 AM
23.8 C
Chennai

நெல்லையில் கந்து வட்டிக்கு தொழிலுக்கு ஆப்பு; உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை….!

silpa 2 - 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்களை அளிக்க கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

கந்து வட்டி பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் 9629711194 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இந்த எண்ணில் பெறப்படும் புகார்களும், நேரில் பெறப்படும் புகார் மனுக்களும், அந்தந்த பகுதி தாசில்தார் மற்றும் போலீஸ் நிலையத்துக்கு உடனடி விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அவர்கள் புகார்கள் குறித்து இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போலீசார், வருவாய் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் வட்டித் தொழில் செய்வோர், வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தாசில்தாரிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு உரிமம் பெறாமல் வட்டித்தொழில் செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகார் மையம் தவிர மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் அலுவலரின் 0462-2576265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories