தமிழகத்தில் காங்கிரஸுக்கு திமுக., பல்லக்கு தூக்காமல் போனாலும்… கரூரில் தூக்குவார்கள் போலிருக்கிறது!

Karur Dmk senthilbalaji jothimani photo - 2026

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியும் மேற்கொண்டு வரும் செயல்களால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்றார்.

அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கே.என்.நேருவின் பேச்சுக்கு பதில் அளித்த, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கூட்டணி சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்றார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறுகையில், கே.என்.நேருவின் கருத்து தி.மு.க.வின் கருத்தாகி விடாது. அவர் எனக்கு நல்ல நண்பர். ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை என்றார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இதனால் கே.என்.நேருவின் பேச்சு தி.மு.க-காங்கிரஸ் இடையே திடீர் மோதலை ஏற்படுத்தியது. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே கோஷ்டி மோதலின் கூடாரமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒவ்வொரு மானசீக காங்கிரஸ் கட்சியினர் ஏன்? தி.மு.க வுடன் நாம் ஏன் இணைய வேண்டுமென்று சிந்திக்க தொடங்கியுள்ளனர்.

25 06 19 Karur Dmk senthilbalaji jothimani photo 02 - 2026மேலும், காங்கிரஸ் தயவினாலும் மோடி எதிர்ப்பினாலும்தான் தி.மு.க வெற்றி பெற்றதாகவும், தி.மு.க.வுக்கும், தி.மு.க வில் அங்கம் வகிக்கும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எங்கும் வாக்கு வங்கி அமையவில்லை என்றும் ஒருமித்த கருத்தாக தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் காங்கிரஸ் கமிட்டியும் தலைகீழாக மாறியுள்ளது.  தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜியும், கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் உறவினர்களாம்! அதுவும் அக்கா தம்பி முறையாம்!

அதனால் கட்சியோ, அல்லது கூட்டணியோ எப்படியோ இருக்கட்டும், நாம் இருவரும் ஒன்றாகவே பயணிக்கலாம் என்று இருவரும் ஒன்றாகவே திடீர், திடீரென்று முடிவுகள் எடுத்து அதிரடியாக களமிறங்குகின்றனர்.

மணல் மாபியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜோதிமணி, தற்போது எம்பி.,யான பின்னர் மணல் அள்ள வேண்டுமென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு கொடுத்தார். அவரது இந்த நடவடிக்கை, ஜோதிமணியின் பேஸ்புக் மற்றும் டுவீட்டர் ஃபாலோயர்ஸுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

25 06 19 Karur Dmk senthilbalaji jothimani photo 04 - 2026இந்நிலையில் அரவக்குறிச்சியில், அரசுக்கு சொந்தமான எம்.எல்.ஏ அலுவலகம் இருந்தும் இன்றும் அதை பயன்படுத்தாமல்., கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனியார் வாடகைக் கட்டடத்தில், தனது சொந்த செலவில், எம்.எல்.ஏ. அலுவலகத்தை செந்தில் பாலாஜி திறந்தார்.

இதிலும் கட்சி முக்கியப் பிரமுகர்களை மட்டும் அழைத்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும் அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ.வுமான  செந்தில் பாலாஜி, அங்கிருந்த உள்ளூர் தி.மு.க பிரமுகர்களைக் கழட்டி விட்ட நிலையில், அதே நிகழ்ச்சியில் அதே வாடகைக் கட்டடத்தில் , கரூர் எம்.பி., ஜோதிமணிக்கும், தனது அலுவலகத்திலேயே தனிஅறை ஒதுக்கித் தந்துள்ளார் என்றால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்களேன்… என்கின்றனர் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்!

எது எப்படியோ, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி இருக்கிறதா இல்லையா? என்று தெரியாமல் இருக்கும் நிலையில் இருவரும் ஒரே கட்டடத்தில் அலுவலகத்தினைத் திறந்திருக்கிறார்கள்.

25 06 19 Karur Dmk senthilbalaji jothimani photo 03 - 2026வருங்காலக் கூட்டணி குறித்து தலைமையும் முடிவு செய்யாத நிலையில் இருவரும் இப்போது ஒன்றாகவே செயல்படுகிறார்கள்.

கடந்த வருடம் அரவக்குறிச்சியில் இதே தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் போது, இதே தொகுதியினை தி.மு.க.வுக்கு காங்கிரஸ் – தி.மு.க தலைமை முடிவெடுத்து அறிவித்த நிலையில், நான் தான் வேட்பாளர் என்றும் சுயேட்சையாகக் கூட போட்டியிடுவேன் என்றும் கூறியவர் ஜோதிமணி.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

எனவே உள்ளாட்சித் தேர்தலில் தலைமையை மீறி முடிவெடுக்க தற்போதே ஒத்திகை பார்ப்பது போல் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள். இதையே தான் பிரதிபலிக்கின்றனர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்களும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories