December 6, 2025, 7:56 AM
23.8 C
Chennai

காபி கொடுத்தாள், மயங்கினாள், கழுத்து சங்கிலியை களவாடினாள் தோழி…….!

COFE 3 - 2025

திருப்பூரில் காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பக்கத்து வீட்டு பெண்ணிடம் நகையை பறித்தவர் சிக்கினார்.

பொதுவாக பஸ், ரெயில்களில் செல்லும் போதும், தியேட்டர்களில் படம் பார்க்க செல்லும் போதும் அருகே இருப்பவர்கள் பிஸ்கட், காபி ஏதேனும் கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடாதீர்கள் என்று எச்சரிப்பது உண்டு.

ரெயில்களில் செல்லும் போது நெருங்கிய உறவினர்கள் போல பழகி மயக்க பிஸ்கட் கொடுத்து பொருட்களை அபேஸ் செய்து விடுவார்கள்.

ஆதலால் முன்பின் தெரியாத யாரேனும் ரெயிலில் பயணம் செய்யும் போது ஏதாவது உணவு பொருட்களை கொடுத்தால் வாங்கி சாப்பிடாதீர்கள் என்று ரெயில் நிலையங்களில் அடிக்கடி ஒலிபெருக்கியில் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்வார்கள்.

ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி பல பயணிகள் ஏமாந்து தங்கள் பொருட்களை இழந்தது உண்டு.

அது போல் திருப்பூரில் ஒரே காம்பவுண்டில் வசிக்கும் வீட்டில் நன்கு தெரிந்த நபரே காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏமாற்றி நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்து உள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு

LEADY 3 - 2025

திருப்பூர் ராக்கியாப்பாளையம் பிரிவு, மணியகாரம்பாளையம் ரோடு, வள்ளியம்மை நகர், முதல் வீதியில் வசித்து வருபவர் ஆனந்தன். இவருடைய மனைவி மல்லிகா (வயது 55). இவர் தரைத்தளத்தில் வசித்து வருகிறார்.

இவர் வசிக்கும் அதே காம்பவுண்டில் முதல் மாடியில் வசித்து வருபவர் தர்மராஜ். இவருடைய மனைவி கார்த்திகா (42). ஒரே காம்பவுண்டில் வசித்து வந்ததால் இரு குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.

சம்பவத்தன்று தரைத்தள வீட்டில் வசிக்கும் மல்லிகா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டு வேலைகளை கவனித்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அங்கு வந்த கார்த்திகா, மல்லிகாவுடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார். பிறகு கார்த்திகா, ‘‘வீட்டு வேலை பார்த்து சோர்வாக இருக்கிறீங்க. கொஞ்சம் காபி கொண்டு வரேன் அக்காள்’’ என்று கூறி விட்டு முதல்மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று உள்ளார்.

அங்கு காபி போட்டு விட்டு மல்லிகா வீட்டுக்கு வந்து அவருடன் சேர்ந்து காபி குடித்து உள்ளார்.

காபி குடித்த சிறிது நேரத்தில் மல்லிகாவுக்கு லேசான மயக்கம் வந்து உள்ளது. உடனே அவர் எனக்கு தலைச்சுற்றல் போல இருக்கிறது என்று கூறி விட்டு தனது வீட்டு படுக்கை அறைக்கு சென்று அவர் படுத்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த போது மல்லிகா தனது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலிச்சங்கிலியை காணாமல் போனதை அறிந்து திடுக்கிட்டார்.

வீட்டில் எங்காவது விழுந்து இருக்குமோ? என தேடி பார்த்தார். காணவில்லை. தான் படுக்கையில் தூங்கிய போது யாரோ மர்ம ஆசாமி வீடு புகுந்து கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகித்தார்.

இது குறித்து திருப்பூர் ஊரக போலீசில் அவர் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது நகை காணாமல் போவதற்கு முன்பு தான் மேல்வீட்டு கார்த்திகா கொண்டு வந்த காபியை குடித்ததாக அவர் தெரிவித்தார்.

அந்த காபி குடித்த சிறிது நேரத்திலேயே தலைசுற்றல் வந்து தான் மயங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் மேல்வீட்டு கார்த்திகாவை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மல்லிகா அணிந்து இருந்த 7½ பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து கார்த்திகாவை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அக்கம், பக்கத்தினர் என்றாலே மிகவும் நெருங்கி பழகுவார்கள். ஆனால் இப்படி மிகவும் நெருக்கமாக பழகி விட்டு ஒரு காபி கொடுத்து 7½ பவுன் நகையை பறித்து விட்டாரே. இப்படியும் திருடுவாங்க போல.. என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கலாயித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories