தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வித்தியாசமான தன்டனை கொடுத்த நீதிபதி.

jadejmend - 2026

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை ரோட்டிலுள்ள ஜேம்ஸ் அன் கோ- நிறுவனத்தில் பணிபுரிந்த கார்த்திகா க/பெ.ராஜ்குமார், ” எனக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக இங்கு பணியாற்றி வருகின்றேன். என்னைப் போல் இங்குப் பணிபுரியும் ஒரு பெண்ணின் துணையோடு மூன்று ஆண்கள் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.

இதனால் என்னுடைய கணவருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நிர்வாகமும் கண்டிக்கவில்லை. அதனால் இந்த தற்கொலை முடிவினை எடுக்கின்றேன்.” எனக் கூறிக்கொண்டே விஷத்தை வாயில் ஊற்றும் வீடியோவினை சமூக வலைத்தளங்களில் வெளியட்டுள்ளார்.

அது வைரலாகி பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. உடனடியாக இதனைக் கண்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ.தினேஷ், பெண்னை மீட்க, அந்தப் பெண் விஷத்திற்குப் பதில் சோப் ஆயில் குடித்ததாக உறுதியாகியது.

இது இப்படியிருக்க, அன்றைய மறு தினமே, ஜேம்ஸ் அன் கோ நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்ததாகவும், அதே நிறுவனத்தில் வேலையை தொடர்வதாகவும் மீண்டும் ஒரு வீடியோவினை வெளியிட்டார் அவர். காவல்துறையும் இருதரப்பையும் விசாரித்து கண்டித்து அனுப்பி வைத்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு கார்த்திகாவின் தற்கொலை வீடியோவினை எதேச்சையாக பார்க்க, அதனை காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி பாலமுருகனுக்கு அனுப்பி வைத்து மீது நடவடிக்கை எடுக்க பணித்துள்ளது.

நீதிபதி பாலமுருகனும் இரு தரப்பையும் வரவழைக்க விஷம் குடித்த கார்த்திகாவும் ஜேம்ஸ் அன் கோ-நிறுவனம் சார்பில் சீதாராமனும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ.தினேஷூம் ஆஜராகினர்.

அனைவரையும் விசாரித்த நீதிபதி பாலமுருகன் இறுதியாக அந்தப் பெண் கார்த்திகாவை நோக்கி, ” இந்த உலகத்துல உனக்கு மட்டுமா பிரச்சனை..? சுற்றி திரும்பி பார்..!! எத்தனைப் பேருக்கு என்னென்ன பிரச்சனைன்னு தெரியும். பிரச்சனை உள்ளவங்களுக்கெல்லாம் தற்கொலை தான் தீர்வு என்றால் யாரும் இங்கு வாழமுடியாது.! உங்களுக்கு சமூக வலைத்தளங்கள் இருக்குன்னு அந்த வீடியோவினை பதிவிட்டுள்ளீர்கள்.

அது எத்தனை பேருக்கு.? எவிவித மன உளைச்சலை தந்தது அது தெரியுமா..? உயிரோடு மதிப்பு தெரியாத நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு வாரக்காலத்திற்கு தினசரி மதியம் 1 மணிக்கு சென்று மாலை 6 மணி வரை அங்கு தங்கி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உயிரின் மதிப்பினை உணர்த்தும் வகையில் நீங்கள் மன நல ஆலோசனை வழங்கவேண்டும்…” என கண்டிப்புடன் வித்தியாசமான தண்டனையை வழங்க நீதிபதியின் தண்டனை வாழ்த்துகளுடன் வைரலாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories