ரோந்துக்கு போறீங்களா..?! தனியா போகாதீங்க..! போலீஸாருக்கு ஆணையர் அறிவுரை!

trichy police attack horz1 - 2026

தனியாக ரோந்து செல்லாதீர்கள் என்று பீட் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அரியமங்கலத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஹரிஹரன் என்பவர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பூக்கடை பகுதியில் போதையில் தகராறு செய்த இஸ்மாயில் என்பவரை கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் மீன் வெட்டும் கத்தியால் ஹரிஹரனை வெட்டி அதில் அவர் படுகாயம் அடைந்தார். இதன் பின்னர் இஸ்மாயில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக பீட் போலீசார் யாரும் தனியாக ரோந்துக்கு செல்ல வேண்டாம் என்று மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது தனியாக சென்றதால் தான் ஹரிஹரன் வெட்டப்பட்டார். அதனால் அவரால் அப்போது தடுக்க முடியவில்லை. அதே போன்று தகராறு நடைபெறும் இடங்களில் போலீசாரை அங்குள்ளவர்கள் எளிதாகத் தாக்கி விடுகின்றனர்.

திருச்சி போலீஸ் ஏட்டை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய ரவுடி இஸ்மாயில், பாத்ரூமில் வழுக்கி விழுந்து…

எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பீட் போலீசார் யாரும் தனியாக ரோந்துப் பணிக்கு செல்ல வேண்டாம்; இரண்டு போலீசாராக இணைந்து ரோந்துப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றனர்.

இருப்பினும், இந்த அளவுக்கு போலீசாரை தாக்கும் அளவுக்கு தைரியம் எதனால் வந்தது? அதைக் கண்டுபிடித்து, களை எடுங்கள் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக, யாராவது காவலர்களைத் தாக்கினால் பதிலடி பயங்கரமாக இருக்கும் ஆனால், காவலர்களைத் தாக்கியவர்களை மதம் பார்த்து பதில் நடவடிக்கை இருக்கிறது; தாக்குபவரின் மதத்தைப் பொருத்து, மென்மையாகவும், வன்மையாகவும் போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். சில நேரம், போலீஸ் உயர் அதிகாரிகளே கூட குறிப்பிட்ட மதத்தினர் பகுதி என்றால், போலீஸாரை ரோந்துப் பணிக்கே செல்ல விடுவதில்லை. அதனால் தான் பயங்கரவாதிகள் நடமாட்டம் அந்தப் பகுதிகளில் அதிகரித்து, அவர்களைப் பிடிக்கவும் விசாரிக்கவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வரவேண்டியிருக்கிறது. இவ்வாறு நடப்பது, உள்ளூர் போலீஸாருக்கு அவமானம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

போலீஸாரை அச்சமூட்டுவதற்கென்றே, குறிப்பிட்ட மதத்தினர் இவ்வாறு அதிக அளவில் போலீஸாரை தாக்குவதும், தட்டிக் கேட்டால் அல்லது விசாரணைக்கு அழைத்தால் ஊரே திரண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனையே சூறையாடுவதும் மிரட்டுவதுமாக ரவுடித் தனம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். அந்த வெளிப்பாடுதான், ஆணையரின் இந்த அறிவுறுத்தல் என்றும், இது போல் போலீஸாரை தாக்குபவர்கள் மீது ஊர் அறிய கடும் தண்டனை கொடுத்திருந்தால், அல்லது கொடுக்கப் பட்டால் இவ்வாறு ரவுடித் தனம் செய்ய அச்சப் பட்டிருப்பார்கள் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories