December 6, 2025, 3:00 AM
24.9 C
Chennai

நத்தம் விஸ்வநாதனின் பதவி பறிப்பு எதிரொலி – அன்புநாதன் பெயில்

 

08-06-16 Karur Anbunathan News photo 07 08-06-16 Karur Anbunathan News photo 08 08-06-16 Karur Anbunathan News photo 01 08-06-16 Karur Anbunathan News photo 02 08-06-16 Karur Anbunathan News photo 03 08-06-16 Karur Anbunathan News photo 04 08-06-16 Karur Anbunathan News photo 05 08-06-16 Karur Anbunathan News photo 06

முன்னாள் தமிழக மின் துறை அமைச்சரும், மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளரான கரூர் அன்புநாதன் தேர்தலில் பணம் பதுக்கல் 2-ம் வழக்கில் கரூர் அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது ஏற்கனவே முதல் வழக்கிற்கு ஜாமின் வழங்கியும், கோர்ட் மற்றும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடாத இன்று காலை திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதனின் கட்சி பதவி பறிப்பை தொடர்ந்து கரூர் அன்புநாதன்  கரூர் நீதிமன்ற எண் 2 ல் ஆஜராகி சரண்டர் ஆனார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததாக தொடர்பாக பதிவான இரண்டாவது வழக்கில் கரூர் அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமீன் கோரி அன்புநாதன் தாக்கல் செய்த மனு  கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதி வேலுமணி, பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பான 2 வது வழக்கில் முன்ஜாமீன் வழங்கினார். வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதேபோல் முதல் வழக்கில் பெற்ற முன்ஜாமீனை கீழ்கோர்ட்டில் ஆஜராகி உறுதிப்படுத்துவதற்கு அன்புநாதன் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. முன்ஜாமீனை உறுதிப்படுத்து 2 வார காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

முன்ஜாமீன் மனு விவரம்:

அன்புநாதன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், “கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.அன்புநாதன்(46). இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், “அய்யம்பாளையத்தில் என் வீடு, கிடங்கில் 22.4.2016-ல் தேர்தல் பறக்கும்படை போலீஸார் சோதனை நடத்தி ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 820, வருமானவரித் துறையினர் ரூ.4.77 கோடி பறி முதல் செய்ததாகவும், வாக்காளர் களுக்கு வழங்குவதற்காக இப் பணத்தை பதுக்கி வைத்திருந்த தாகவும் வேலாயுதம்பாளையம் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை எனக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

ஆனால் 20 நாட்கள் கழித்து இதே சம்பவம் தொடர்பாக வேலா யுதம்பாளையம் போலீஸில் மண் மங்கலம் வட்டாட்சியர் மற்றொரு புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார் என் மீது வருமான வரிச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் வருமானவரிச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க வட்டாட்சியருக்கு அதிகாரம் கிடையாது. வருமானவரி ஆணையரின் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த முடியாது.

என் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே வருமானவரித் துறையிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதனை ஏற்று அவருக்கு 2-வது வழக்கிலும் திங்கள்கிழமை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் நீண்ட நாட்களாக காவல்துறையினருக்கும், நீதித்துறைக்கும் டிமிக்கு கொடுத்து வந்த அன்புநாதன் கோர்ட்டில் ஆஜரான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்ற நிருபர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories