செய்தியைப் படித்தேன் ! செய்யத் துடித்தேன் ! சிறைக் கைதிகளுக்குக் கொடுத்தேன்

kaithu e1563169848461 - 2026உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த மோதிலால் யாதவ் என்ற தொழிலதிபர் நேற்று தன் 73-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். தன் பிறந்தநாளன்று ஏதேனும் புதிதாகச் செய்ய வேண்டும் என நினைத்த அவர் அங்குள்ள மாவட்ட சிறைக்குச் சென்று சில கைதிகளை தன் சொந்த செலவில் விடுதலை செய்துள்ளார்.

சிறிய தவறு செய்துவிட்டு தங்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் அபராதம் செலுத்த முடியாமல் தொடர்ந்து சிறையிலேயே இருக்கும் 17 குற்றவாளிகளுக்கு அபராத பணத்தைச் செலுத்தி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளார். அனைவருக்கும் சேர்ந்து மொத்தமாக 32,380 ரூபாய் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.Cellular Jail 1 - 2026இது பற்றிப் பேசியுள்ள ஆக்ரா சிறை கண்காணிப்பாளர் சஷிகாந்த் மிஸ்ரா, குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல குற்றங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களால் அபராதத் தொகை செலுத்தமுடியாததால் தொடர்ந்து சிறையிலேயே இருந்தனர்.relise - 2026தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் சாகர் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரின் தண்டனை காலம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இருப்பினும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 1,089 ரூபாயை அவராலும், அவரது குடும்பத்தாலும் செலுத்த முடியாத காரணத்தால் அவர் வலுக்கட்டாயமாகச் சிறையில் இருக்கும் சூழ்நிலை உருவானது அவ்வாறு இருக்கும் சிறை கைதிகள் சிலரை தொழிலதிபர் மோதிலால் யாதவ் விடுவித்துள்ளார் என்றார்.mothilal - 2026ஒரு நாள், ஒரு தொழிலதிபர் தன் பிறந்த நாளன்று சிறை கைதிகளை விடுவித்தார் என்ற செய்தியைப் படித்து விட்டு என் மகன் என்னிடம் வந்து ‘நீங்களும் உங்கள் பிறந்தநாளன்று இதேபோல் செய்வது சிறப்பு  எனக் கூறினான். அதனைக் கேட்டு நானும் இவ்வாறு செய்ய முடிவு செய்தேன். என் இளைய மகன் வழக்கறிஞராக உள்ளார். கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் அவர்கள் கட்ட வேண்டிய அபராதத் தொகையை நீங்கள் செலுத்தினால் கைதிகளுக்கு விடுதலை பெற்றுத் தரலாம் என என்னிடம் கூறினான். அதன் பிறகுதான் பணம் செலுத்தினேன்” என கைதிகளை விடுதலை செய்யத் தூண்டுதலாக இருந்தது பற்றி  தொழிலதிபர் மோதிலால் யாதவ்  கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories