காருடன் தொழிலதிபரை கடத்தி ரூ.1லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!

 

 

car 1 - 2026

புழல் அருகே காருடன் தொழில் அதிபரை கடத்தி, சரமாரியாக தாக்கி ரூ.1 லட்சம் பறித்த மர்மஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மதுரவாயலை அடுத்து உள்ள வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணன்(வயது 49). தொழில் அதிபரான இவர், செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன், கம்பெனியில் இருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், திடீரென காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது காரில் ஏறியுள்ளனர்.

இதனையடுத்து கிருஷ்ணனை சரமாரியாக தாக்கி, கத்திமுனையில் ஒருவர் மிரட்ட, மற்றொருவர் காரை ஓட்டியுள்ளார்.

காருடன் அவரை கும்மிடிப்பூண்டிக்கு கடத்தி சென்றனர். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் காரை பின்தொடர்ந்து சென்றார்.

செல்லும் வழியில் கிருஷ்ணனை கடுமையாக தாக்கிய கடத்தல் ஆசாமிகள், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறித்துள்ளனர்.

பின்னர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காரை நிறுத்திய அவர்கள், காருடன் கிருஷ்ணனை விட்டுவிட்டு, கீழே இறங்கி மோட்டார் சைக்கிளில் வந்த தங்கள் கூட்டாளியுடன் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதையடுத்து கிருஷ்ணன் காரில் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.

ஆனால் சம்பவம் நடந்தது புழல் பகுதியில் என்பதால் இதுபற்றி புழல் போலீசில் புகார் செய்யும்படி கூறி அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதைதொடர்ந்து கிருஷ்ணன், புழல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் கிருஷ்ணனை காரில் கடத்தி பணம் பறித்துவிட்டு தப்பிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories