புருஷ லட்சணம்ன்னா என்ன தெரியுமா?1

thought provoking - 2026

உத்யோகம் புருஷ லக்ஷணம் என சொல்வார்கள்.

ஆனால் உத்யோகத்தை தவிர்த்து மேலும் பல முக்கிய குணங்களையும் ஒரு கணவன் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாபாரதத்தின் உத்யோக பர்வத்தில் விளக்கப்படுகின்றது.

நல்ல கணவனிடம் கட்டாயம் இருக்கவேண்டிய 10 பண்புகள்:

1) அக்கறை – மனைவி, பிள்ளை(கள்) மற்றும் குடும்பத்தாரின் மீது முழுமையான அக்கறை கொள்தல்.

2) தானம் – தம்மால் இயன்றதை தேவைபடுவோருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை.

3) இனிமை – மனைவியிடம் எப்போதும் இனிமையாக பேசவும், மென்மையாக நடந்தும் கொள்தல்.

4) நல்வாக்கு – எவரிடமும் நன்மையானவற்றை மட்டுமே பேசுதல்.

5) மரியாதை – மனைவி என்பவள் மதிப்பிற்குரியவள் மற்றும் மரியாதைக்குரியவள் என்பதை உணர்ந்து நடந்து கொள்தல்

6) மதிப்பு – தாய், தந்தை, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரிடம் மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்து கொள்தல்.

7) அன்பு – மனைவியின் உடன்பிறந்தவர்களிடம் அன்போடு நடந்து கொள்தல்.

8) இன்முகம் – விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்றல்.

9) பக்தி – இறைபக்தி கொண்டிருத்தல், தெய்வங்களை வணங்குதல் மற்றும் ஞான நூல்களைக் கற்றல்.

10) பாதுகாப்பு – குடும்பத்தினரை எந்தவொரு ஆபத்திலிருந்தும் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் வைத்திருத்தல்.

நல்ல கணவன் கொண்டிருக்கக் கூடாத 5 பண்புகள்:

1) பிறனில் விழைதல் – தம் மனைவியைத் தவிர மற்றொரு பெண்ணிடம் தகாத உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

2) புறம்பேசுதல் – எவரிடமும் தம் மனைவி, பிள்ளை(கள்) மற்றும் குடும்பத்தார் பற்றி தகாதவற்றை பேசக் கூடாது. மற்ற குடும்பத்தாரைப் பற்றியும் தகாதவற்றைப் பேசக் கூடாது.

3) பொறாமை – மற்றவர்களின் மனைவி, பிள்ளை(கள்) மற்றும் குடும்பத்தார் மீது பொறாமை கொள்ளக் கூடாது.

4) கோபம் – எந்தவொரு சமயத்திலும் (மனிதனின் ஆறு எதிர்களில் ஒன்றான) கோபத்தின் வசப்பட்டு குடும்பத்தாரிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது.

5) கடமை மறத்தல் – எந்தவொரு சமயத்திலும் தன் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு மற்றும் குடும்பத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மறக்க கூடாது.

முதலில் கூறப்பட்டுள்ள பத்து பண்புகளில் எத்தனை உங்களிடம் உள்ளது? கீழே கூறப்பட்டுள்ள ஐந்து கூடாத பண்புகளில் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

அப்படி இருந்தால் இன்றே அதை தவிர்த்து விடுங்கள். ஒரு நல்ல கணவனாக உங்களின் தர்மத்தை மீறாமல் வாழ்வதே தங்கள் வாழ்க்கையின் முதல் முக்கியமாகும்.

  • பாமரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories