சுபாஷிதம்: மரமே குரு!

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்!
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

49. மரமே குரு!

செய்யுள்:

தத்தே பரம் குசுமபத்ரபலாவலீனாம்
கர்மவ்யதாம் வஹதி சீதபவாம் ருஜம் ச |
யோ தேஹமர்பயதி சான்யசுகஸ்ய ஹேதோ :
தஸ்மை வதான்ய குரவே தரவே நமோஸ்து ||

பொருள்:

மலர்கள், இலைகள், பழங்கள் இவற்றின் பாரத்தைத் தாங்கி, வெயில், மழையைத் தாங்கி, பிறருக்கு நிழலும் பழங்களும் கொடுப்பதற்காக மரங்கள் உடலை அர்ப்பணிக்கின்றன. கொடையாளிகளுக்கு மரங்கள் குருவாக நிற்கின்றன. அப்படிப்பட்ட மரங்களுக்கு வந்தனம்!

விளக்கம்:

‘வ்ருக்ஷோ ரக்ஷதி ரக்ஷித:’ என்பது புகழ்பெற்ற வாக்கியம். மரங்களை தேவதைகளாக பூஜிப்பது பாரதிய சம்பிரதாயம். நன்றி காட்டுதலின் சின்னம் இது. இந்த ஸ்லோகத்தில் மரம் ஒரு குருவாக வர்ணிக்கப்படுகிறது. குருமார்கள் தன் திறமையையும் ஞானத்தையும் சீடர்களிடம் பரப்புவார்கள்.

தன்னலமற்று பிறர் நலனுக்காகவே வாழ்க்கையை செலவிட நினைப்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பவை மரங்கள். இந்த வ்ருக்ஷ குருவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. இதில் மரத்தை ‘வதான்ய குரு’ என்கிறார். வதான்ய என்றால் அனைத்தையும் அளிப்பவர் என்று பொருள்.

மரங்களுக்கு தீங்கு செய்வது குருவுக்கு செய்யும் அபச்சாரம் என்பது உட்பொருள். அது நன்றி மறந்த செயலாகும். மரத்தில் பயனற்றது என்று எதுவுமில்லை. அதேபோல் நமக்குள்ள கல்வி, அனுபவம், தனம் போன்றவை நம்மைச் சுற்றியுள்ள உலகிற்காக அனைவரின் நலனுக்காக செலவிடவேண்டும்.

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த மரங்கள் தற்போது அரிதாகி வருகின்றன. அதற்கான காரணங்களில் ஒன்று மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது. சாலை விரிவாக்கம், வீடு கட்டுவது, தொழிற்சாலைகளை விரிவு படுத்துவது என்று கோடிக் கணக்கான மரங்கள் அண்மையில் காணாமல் போயின. சுற்றுச்சூழல் சமநிலை அதனால் பாழானது.

மீண்டும் உலக மேதாவிகள் அமர்ந்து குளோபல் வார்மிங் என்று அச்சம் கொண்டு மரம் வளர்ப்பதற்கு அழைப்பு விடுத்தார்கள். எத்தகைய அலட்சியப் போக்கினால் பிராண வாயு அளிக்கும் மரங்களை அழித்து உள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories