December 6, 2025, 12:43 PM
29 C
Chennai

மழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”!

“மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது கண்ணீர்

. (மழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”

 

(பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.)

 

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 

சென்னை வர்த்தகப் பிரமுகர்,பெரியவாளை தரிசனம் செய்யக் காஞ்சிபுர25348822 1793332170711940 70046628756731077 n 1 - 2025ம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில் வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது.

“என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்” என்று கேட்கவில்லை; ;எசமானே! மழை இல்லாமல் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணணும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.

 

“அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு.பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரப் பதிகங்களில் ,திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில் ஒரு பதிகம் இருக்கு ஓதுவார்களுக்குத் தெரியும் அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம்.மழை பெய்யும். ஜனங்கள் சௌக்கியமா இருப்பா….”

பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன் கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.

தேவைப்பட்டால், இன்றைக்கும்,திருப்பராய்த்துறை பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக்கொண்டுவரலாமே?

 

பக்தர்களுக்கு நினைவிருந்தால் சரி.

 

மெம்பர்களுக்காக அந்தப் பதிகம். கீழே.

 

திருப்பராய்த்துறை
பண் – மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
1448
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.
1.135.1
1449
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.
1.135.2
1450
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே.
1.135.3
1451
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே.
1.135.4
1452
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே.
1.135.5
1453
மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே.
1.135.6
1454
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.
1.135.7
1455
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே.
1.135.8
1456
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.
1.135.9
1457
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.
1.135.10
1458
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.
1.135.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் – பொன்மயிலாம்பிகையம்மை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories