February 22, 2026, 9:16 AM
26.1 C
Chennai

ஆன்மீக கேள்வி பதில் – பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்குப் பிறகு பிள்ளையாரை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?

Screenshot 2019 08 21 16 33 32 301 com.google.android.googlequicksearchbox - 2026

விநாயக சதுர்த்தி பூஜைக்குப் பிறகு கணபதியை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?

பதில்:- மண்ணால் செய்த எந்த தெய்வ மூர்த்தியானாலும் பூஜைக்கு பிறகு நீரில் கரைத்துவிட வேண்டும். உலோகத்தால் செய்த பிரதிமையாக இருந்தால் ஆவாஹனம் செய்து வழிபட்ட பின் மீண்டும் ப்ரோக்ஷணம் போன்றவற்றைச் செய்து பூஜையை தொடங்கலாம்.

ஆனால் மண்ணால் சிலை செய்த போது தீட்சை காலம் என்று விதித்துக் கொள்ளும் பட்சத்தில் அதாவது ஒன்பது நாட்களோ முப்பது நாட்களோ பூஜை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டால் அத்தனை நாட்களும் அந்த ஒரே மண் சிலையையே நாம் பூஜை வழிபாடு செய்கிறோம். தீட்சை முடிந்து அதை நிமஞ்ஜனம் செய்து தீரவேண்டும். அதாவது நீரில் கரைத்து விட வேண்டும்.

மண்ணால் செய்த சிவலிங்கத்தை ‘பார்த்திவ லிங்கார்ச்சனை’ செய்த பின் அந்த பார்த்திவ லிங்கத்தை நீரில் கரைக்கிறோம். வட இந்தியாவில் கல்கத்தா ஒரிசா போன்ற மாநிலங்களில் பிள்ளையார் சதுர்த்தி போலவே மண்ணால் செய்த துர்காதேவியை நவராத்திரி வழிபாட்டின்போது பூஜை செய்வார்கள். அவற்றையும் கூட ஒன்பது நாள் பூஜைக்கு பின் நீரில் கரைத்து விடுவார்கள். இது நம் கலாச்சார வழிமுறையில் உள்ள சிறப்பான அம்சம்.
IMG 20190821 163029 - 2026
எதற்காக மண்ணால் செய்ய வேண்டும்? நீரில் கரையும் இயல்பு மண்ணிற்கு மட்டுமே உள்ளது. அது மட்டுமல்ல. எப்படிப்பட்ட மண் உபயோகிக்க வேண்டும்? நீரில் கரையக் கூடியதாகவும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாமலும் உள்ள மண்ணையே விநாயகர் சிலை செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்று ரிஷிகள் தெளிவு படுத்தியுள்ளார்கள். இதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஹிந்து தர்மத்தில் எந்த ஒன்றும் இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்த கூடியது அல்ல. அப்படிப்பட்ட ஏதாவது தென்பட்டது என்றால் அது பின்னாட்களில் செயற்கையாக ஏற்பட்டதாக இருக்குமே தவிர உண்மையான சம்பிரதாயத்தில் அவ்வாறு இல்லை.

மேலும் விநாயகர் சிலைகள் கூட மிகப் பெரியவையாக செய்து வழிபட வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. மண்ணால் செய்த சிலை கூட ஓரளவுக்கு அளவோடு கூடியதாக இருக்க வேண்டுமே தவிர பல அடி உயரம் உள்ளதாக செய்து வைக்கச் சொல்லி எங்கும் கூறவில்லை. அதற்கு வண்ணம் பூசச் சொல்லி சாஸ்திரம் கூறவில்லை. மண்ணால் சிலை செய்து பூஜித்து வழிபடு என்று மட்டுமே கூறியுள்ளது. அழகுக்காக மஞ்சள் குங்குமம் இட்டு விட்டால் அதுவே நல்ல அலங்காரம்… நல்ல வண்ணம்!

ஆனால் நம் திருப்திக்காக நிறங்களைக் கலப்பதைப் பார்க்கிறோம். செயற்கை நிறங்கள் கலப்பது நல்லதல்ல. மூலிகைகள் இலைகள் பூக்கள் இவற்றை கொண்டு இயற்கையில் கிடைக்கும் வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

பிள்ளையார் சிலை நான்கு கைகளோடு கூடியதாக இருக்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும் விதம் முதலானவை சாஸ்திரங்கள் கூறியுள்ள முறைப்படி மண் விநாயகரை தயாரிக்க வேண்டும்.

மண் கணபதியை நீரில் கரைப்பதன் பின்னால் யோக சாஸ்திரப்படி ஒரு காரணம் உள்ளது. யோகத்தில் ‘பஞ்சீகரணம்’ என்று ஒரு வழிமுறை உள்ளது. அதனை குரு முகமாக உபதேசம் பெற்று செய்ய வேண்டும். முதலில் நமக்குள் உள்ள ப்ருத்வி தத்துவத்தை ஜல தத்துவத்தில் லீனம் செய்வது. ஜல தத்துவத்தை அக்னி தத்துவத்தில் லீனம் செய்வது. அக்னியை வாயு தத்துவத்திலும் வாயு தத்துவத்தை ஆகாய தத்துவத்திலும் லீனம் செய்வது. இந்த ஐந்தையும் புத்தி தத்துவத்தில் லீனம் செய்து அதனை பரமாத்மாவிடம் ஐக்கியம் செய்வது என்பது யோகக் கிரியை. இது ஒரு வாக்கியத்தில் கூறி விடுவதைப் போல எளிதான செயல் அல்ல. முறையோடு பயின்று கடைபிடிக்க வேண்டிய யோகக்கிரியை.

அவற்றுக்குத் தொடர்பான ஸ்தானங்கள் நம் உடலில் உள்ளன. பிரதிவி தத்துவம் என்பது மூலஸ்தானம். கணபதி மூலாதாரத்திற்கு அதிபதி. இதன் மூலம் இன்னும் ஒரு விஷயம் கூட நமக்குத் தெரிகிறது. அது என்னவென்றால் நம் பூஜை விதானங்கள் யாரோ சிலர் நம்பிக்கைக்காக ஏற்படுத்தியவை அல்ல. அவை ஒன்றுக்கொன்று இணைந்துள்ள வழிமுறைகள்.
IMG 20190821 162758 - 2026

முதலில் வழிபாடு பெறும் கணபதிக்கும் யோக சாஸ்திரத்திற்கும் அனுபந்தம் உள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. “த்வம் மூலாதாரே ஸ்திதோஸி நித்யம்…!” என்று ‘கணபதி அதர்வசீர்ஷம்’ கூறுகிறது.

இதே கருத்தை முத்துஸ்வாமி தீக்ஷதர் “மூலாதார க்ஷேத்ர ஸ்திதம் பராதிசத்வாரி வாகாத்மகம் ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்…” என்று வாதாபி கணபதி கீர்த்தனையில் துதிக்கிறார்.

மூலாதாரம் ப்ருத்வி ஸ்தானம். வரிசையாக சுவாதிஷ்டானம் மணிபூரகம் அனாகதம்… எல்லாம் கூட பஞ்ச பூதங்களில் மீதி உள்ள பூதங்களின் ஸ்தானங்கள். அதிலும் இன்னுமொரு ஆச்சரியம் அளிக்கும் செய்தி என்னவென்றால் யோகத்தில் முதலில் உள்ளது மூலாதாரம். பூஜைகளில் முதலிடம் கணபதிக்கு. இதன் மூலம் கணபதி பூஜைக்கும் யோக சாஸ்திரத்திற்கும் தொடர்பு உள்ளதை அறியலாம்.

நாம் கணபதியை வழிபடுவதால் நமக்குத் தெரியாமலேயே மொத்தம் குண்டலினி சக்திக்கு ஆதாரமான மூலாதாரம் தூண்டப்படுகிறது. இது அதிலுள்ள சிறப்பு.

மூலாதாரச் சக்கரத்தில் உள்ள கணபதியின் சைதன்யத்தை ஆன்மீக சாதனை மூலம் அடுத்த சக்கரத்தில் லயம் செய்கிறோம். இந்த யோகச் செயலையே பௌதீகமாக மண்ணால் செய்த கணபதி உருவத்தை நீரில் கரைக்கும் செயலாகக் காண்கிறோம். இது ஸ்தூலத்தை சூட்சுமமாக மாற்றும் ஒரு சிறப்பான செயலாக்கம். வெளிப்படையாக நாம் செய்யும் ஒரு வழிபாடு இவ்விதம் சூட்சும சக்தியாக மாறுகிறது.

இன்னுமொரு ரகசியம் என்னவென்றால் நாம் விக்ரகத்தில் தெய்வத்தை வழிபடுவோமே தவிர விக்ரகம் மட்டுமே தெய்வம் என்று நினைப்பதில்லை. இது குறித்து சுவாமி விவேகானந்தர், “விக்ரகத்தை தெய்வமாக பாவனை செய்து வழிபடு! ஆனால் விக்கிரகமே தெய்வம் என்று எண்ணாதே!” என்று கூறுகிறார்.

அதனால்தான் நம் பூஜைகளில் ஆவாஹனம் என்று ஒரு வழிமுறை உள்ளது. ஆவாஹனம் என்றாலே அதுவரை இல்லாத ஒன்றை அதில் ஏற்றுகிறோம் என்று பொருள். நாம் தூய்மையான முறையில் அமர்ந்து மந்திரத்தின் உதவியோடு தெய்வசக்தியை பிரவேசிக்க செய்கிறோம். அதன் பின் அதனை தெய்வமாக வழிபடுகிறோம். வழிபட்டபின் எந்த விஸ்வ வியாபகமான எங்கும் பரந்துள்ள சைதன்யத்தை பாவனையின் பலம் மூலம் சப்த சக்தியான மந்திரத்தின் உதவியோடு அதில் ஆவாகனம் செய்தோமோ, அதனை ஷோடசோபசார பூஜை அல்லது அவரவர் சக்திக்கேற்ப அர்ச்சனை செய்கிறோம். அவ்விதம் வணங்கப்பட்ட சைதன்ய சக்தி அந்த விக்ரகத்தில் நிறைகிறது. முடிவில் வழிபாடுகளும் ஆராதனையும் பூர்த்தியானபின் அதனை நாம் ‘உத்வாசனம்’ செய்கிறோம். அதுவரை வழிபாடு செய்யப்பட்ட ஈஸ்வர சக்தியை நம் இதயத்துக்குள் பிரவேசிக்கச் செய்வதே ‘உத்வாசனை’. வழிபட்ட தெய்வீக சக்தியை வேறு எங்கோ அனுப்ப மாட்டோம். நம் உள்ளத்திற்குள் எடுத்துச் செல்கிறோம்.

அப்போது என்ன நிகழ்கிறது? அதுவரை பூஜை செய்த தெய்வீக சக்தி நம்முள் நுழைந்தபின் அதற்கு ஆதாரமாக இருந்த சிலை வெறும் பொம்மையாக மாறுகிறது. அதனை என்ன செய்வது? மீண்டும் அதனை நிமஞ்ஜனம் அதாவது நீரில் கரைக்க வேண்டும். தாதுக்கள், உலோகங்கள் போன்றவற்றால் செய்த சிலை என்றால் புரோக்ஷணம் போன்றவற்றை செய்து மீண்டும் பயன்படுத்தலாம். மண்ணால் செய்த பொம்மைகளை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அதனால் நீரில் அதனை நிமஞ்ஜனம் செய்கிறோம்.

ஏனென்றால் அதுவரை பவித்திரமாக இறைசக்தியை அதில் வைத்திருந்தோம். அதே புனிதமான பாவனையோடு அந்தச் சிலையை நீரில் கரைக்கிறோம். இதனைக் கொண்டு ஹிந்துக்கள் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் அல்லர்…! விக்ரகத்தில் ஆவாஹனம் செய்து ஆராதிப்பவர்கள் என்ற கருத்து தெளிவாக வெளிப்படுகிறது. இத்தகைய உயர்ந்த தத்துவம் நிமஞ்ஜனம் என்ற செயலில் மறைந்துள்ளது. இதனைப் புரிந்து கொண்டு செய்தால் வேறுபாடாக கருதாமல் அழகான சாத்வீகமான கருத்தை அறிந்து கொள்ள முடியும்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories