February 21, 2026, 2:26 PM
30.4 C
Chennai

திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை நாளை திறப்பு!

SABARIMALAI NADI - 2026

திருவோண பூஜைகளுக்காக, சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

கேரள மாநிலம் பந்தனம் திட்டாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை முதல் வரும் 13-ஆம் தேதி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவோண பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை மாலை, 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுவார்.

sabarimali iyappan kovil 1 - 2026

பின்னர் இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

10-ஆம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார்.

பின்னர் 11-ஆம் தேதி திருவோணத்தன்று, அய்யப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெறும்.

அன்று தேவசம்போர்டு சார்பில், பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும்.

13-ஆம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

sabarimali iyappan kovil 2 - 2026

இதனிடையே சபரிமலை பிரச்னை குறித்து, பந்தளம் மன்னர் ரேவதிநாள் ராமவர்ம ராஜா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, சபரிமலை கோவிலை நிர்வகிக்க சிறப்பு தனி சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என, கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

sabrimali - 2026

இதன்மூலம், தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலையை, அரசு தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

மண்டல காலம் நெருங்கி வரும் நிலையில், அரசின் இந்த புதிய அறிவிப்பு, பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories