ஸ்ரீரங்கம் அத்யயன உத்ஸவம் தொடக்கம்: வைகுண்ட ஏகாதசி ஜன.8

Published:

வைகுண்ட ஏகாதசி 8.1.2017

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இங்கே திருவரங்க ராஜா அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இவ்விழா கடந்த டிச.28 அன்று இரவு 7 மணிக்கு கர்ப்பகிரகத்தில் திருநெடுந்தாண்டக பாராயணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்துத் திருநாள் 29-ம் தேதி தொடங்கியது. இந்தப் பகல் பத்து திருநாட்களில் உத்ஸவரான நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளுவது காணக் கண்கொள்ளாக் காட்சிதான். அவர் அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கே பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவில், பரமபத வாசல் திறப்பு பிரதான இடம் பெறும். சொர்க்க வாசல் திறப்பு என்று பாமர மக்களால் பய பக்தியுடன் போற்றிக் கொண்டாடப் படும் இந்த வைபவம், வரும் ஜனவரி 8-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். அந்த தினத்தில் இருந்து ராப்பத்து திருநாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து திருநாளில் ஜனவரி14ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், 15ஆம் தேதி வேடுபறி,17ஆம் தேதி தீர்த்தவாரி, 18ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் ஆகியவை நடைபெறும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img