ஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்!

badrinarayanar1 Copy - 2026

ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் இருந்தான். அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை. அந்தக் காலத்தில் நடந்தே செல்ல வேண்டும்; ஆகையால் பயணச் செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான்!

இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. திருமண செலவுக்கு உண்டியல் பணம் உதவியது! பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல, உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்!

அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான்! மறுபடியும் உண்டியல் உதவியது! பிறகு ஒரு பிள்ளை! அதற்கும் அதே உண்டியல்!

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, திருமணம் பேரன், பேத்தி இப்படியே காலம் கழிந்தது..!

badrinarayanar Copy - 2026

தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார். ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து, பத்ரிநாத் வந்தடைந்தார்!

அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக… பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது!

பட்டரோ இனி ஆறு மாதங்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் என கூற, முதியவர் அதிர்ந்தார்! பட்டரின் கால்களைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார், முதியவர்.

அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது! ஒரு முறை அவனை சேவித்து விடுகிறேன்… தாங்கள் நடை திறந்தால் என கண்ணீர் விட்டு அழுதார்!

பட்டரோ அசைவதாக இல்லை மூடிய நடை திறக்கப்படாது என கூறி நகர்ந்தார்! இவரோ தன் தலை விதி எண்ணி வருந்தினார்!

இனி மேல் எந்தக் காலத்தில் நான் மீண்டும் நடந்து வந்து, இந்த பத்ரிநாதனை சேவிக்க என அழுது கொண்டு புலம்பினார்!பட்டரோ அய்யா மலையை விட்டு அனைவரும் இறங்கப் போகிறோம், வாரும் எனக் கூற… கிழவனோ, நீங்க போங்க நான் சிறிது நேரம் அமர்ந்து விட்டாவது வருகிறேன் எனக் கூறினார்!

சரி என அனைவரும் இறங்க சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கியது! அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான்.
அவன் அந்த முதியவரிடம், ‘ஏ தாத்தா! இங்க என்ன தனிமையில் அமர்ந்து உள்ளீர்’ எனக் கேட்க… அவரோ அந்தச் சிறுவனிடம் தன் வயிற்றெறிச்சலைக் கூறி அழுகிறார்!

இதைக் கேட்ட சிறுவனோ சரி வாரும்.. அருகில்தான் நான் தங்கியுள்ள குகை உள்ளது. அங்கு வந்து உணவருந்தி பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றான்.

அவருக்கு உணவளித்து தாத்தா உறங்கு! எல்லாம் நல்லதாகவே நடக்கும் எனக் கூறிச் சென்றான்!

முதியவரும் நாரயணா கோவிந்தா.. என்று பக்தியோடு நாம ஸ்மரணம் செய்து விட்டு உறங்கினார்!

badrinarayanatemple Copy - 2026

பொழுது விடிந்தது! கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தால், கோவில் திறந்துள்ளது! கூட்டமோ ஏராளம்! கிழவனுக்கோ அதிர்ச்சி…

என்னடா இது! பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார்; நடை திறக்கப் பட்டு உள்ளதே என நேராக பட்டரிடம் சென்று, ‘ஏ சாமி கோவில் திறக்கப்படாது என சொன்னீங்க! இப்ப மறுநாளே திறந்து இருக்கீங்க’ன்னு கேட்க…

பட்டரோ யோசித்தார்! இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரம் அல்லவா வந்தவர் என நினைத்து…

சரி அய்யா முதலில் நாரயணனை வணங்கி விட்டு வா எனக் கூற… இவரும் உள்ளே சென்றார்!

அங்கே நாரயணன் அந்தச் சிறுவனாகத் தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது!

ஆறு மாதப் பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளலே! அடியார் பொருட்டு நீ ஆடாத நாடகம்தான் என்னவோ எம் வேந்தே… எனப் பரவசத்தில் ஆடினார்.

ராம் க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி!

  • ஸ்ரீவைஷ்ணவிஸம் குழு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories