காஞ்சி மஹான் கருணை: திருமணத் தடைக்கு பெரியவர் சொன்ன வழி

Published:

கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

பரமாச்சார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்

மங்கள சரணே மங்கள வதனே
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே
ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி
நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

சிவமுக விநுதே பவசுக தாயினி
நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பக்த சுமானஸ தாப வினாசினி
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

கேனோ பநிஷத் வாக்ய வினோதினி
தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

பரசிவ ஜாயே வர முனி பாவ்யே
அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே
மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம்
குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

நன்றி – ஸ்ரீ மடத்தில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு கையடக்க புத்தகத்தில் அஷ்டோத்ர சத மற்றும் த்ரிசதீ நாமாவளிகளுடன் காணப்பெற்றது.

– பரஸ் நாகராஜ சர்மா

Related articles

Recent articles

spot_img