ஒரு எழுத்து தரும் வெவ்வேறு அர்த்தங்கள்! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar 1 - 2026

ஒரு சமயம் பிரம்மா தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் உபதேசம் செய்தார். அவர்கள் எல்லோருக்கும் பிரம்மா த த த என்ற ஒரே வார்த்தையை உபதேசத்தை அளித்தார். பொதுவாகவே தேவர்களுக்கு இந்திரிய சுகங்களில் சற்று அதிகமாக நாட்டம் இருக்கும். ஆகையால் பிரம்மா தங்களைப் புலனடுக்கத்தோடு இருக்கச் சொன்னதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

அதாவது த என்ற எழுத்து தாம்யத உங்களை அடக்குங்கள் என்ற சொல்லை குறிப்பதாக அவர்கள் அர்த்தம் செய்து கொண்டார்கள்.

மனிதர்கள் இயற்கையிலே சுயநலக் காரர்களாக இருப்பதால் தங்கள் வருங்காலத்திற்காக நிறைய செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டிருப்பார்கள். எனவே மனிதர்கள் த என்ற எழுத்திற்கு தத்த தானம் செய் என்ற பொருளை கற்பித்துக் கொண்டார்கள்.

கொடூரமாக நடந்து கொள்வதே அசுரர்களுடைய இயற்கை தன்மை. அதனால் அவர்கள் த என்ற எழுத்தை தயத்துவம் கருணை காட்டுங்கள் என்று சொல்லை கருத்தில் கொண்டே பிரம்மா தங்களுக்கு உபதேசித்திருக்கிறார் என்று நினைத்தார்கள்.

பிரஹதாரண்யக உபநிஷத்தில் வரும் இக்குறிப்பிட்ட பகுதிக்கு ஆதிசங்கரர் வியாக்கியானம் செய்யும் பொழுது தேவர்கள் மனிதர்கள் மற்றும் அசுரர்களை தனித்தனியாக இது குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மிகுதியான குணத்தோடு ஒருவன் இருந்தாலும் இன்பம் நுகர்தல் மற்றும் கர்வம் ஆகிய சுபாவங்களால் களங்கப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைத்தான் இங்கே தேவர்கள் என்ற சொல் குறிக்கிறது.

பயங்கரமான சுபாவத்தையுடைய கல்நெஞ்சுக்கார மனிதர்களை அசுரர்கள் ஆவார்கள். ஆகையால் புலனடக்கத்தையும் தானத்தையும் கருணையையும் எல்லா மனிதர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் இந்த என்ற உபதேசத்தை தான் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா இடியோசை மூலமாக இன்றுவரை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு குரு தன் தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு உபதேசத்தை அளிக்கிறார். ஒரே உபதேசத்தினால் வெவ்வேறு கருத்துகளை வெவ்வேறு சிஷ்யர்களின் மனங்களில் தோன்றச் செய்ய முடியும் என்பதற்கு பிரம்மா அளித்த உபதேசமே ஒரு சான்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories