December 13, 2025, 3:58 PM
28.1 C
Chennai

இந்து மதம் திரும்ப சடங்கு கள்; ஆச்சார்யாள் பதில்!

abinav vidhya theerthar 1 - 2025

சிஷ்யர்:
இந்து மதத்தை விட்டு வெளியேறி வேறு மதங்களை ஒப்புக் கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் திரும்பவும் இந்துமதத்திற்கு சேர வேண்டும் என்று விரும்பினால் அவர்களை இப்போது சேர்த்துக்கொள்ள முடியுமா?

ஆச்சார்யாள்: சாஸ்திரங்களில் கூறப்பட்டவை நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. இந்து மதத்தைவிட்டு ஒருவன் வெளியேறி விட முடியும் என்று சாஸ்திரங்களில் கூறப்படவில்லை. ஆகவே சாஸ்திரங்களின் கட்டளைக்கு கட்டுப்படாதவன் பிரஷ்டன் ( தவறியவன்) ஆகிறான். ஆகையால் ஒருவன் இந்து மதத்தை விட்டுச் செல்லும் பிரச்சனையே ஏற்படுவதில்லை.

சிஷ்யர்:
ஒருவன் மீண்டும் இந்துவாக வாழ வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
ஆச்சாரியாள்:
வெவ்வேறு பாவங்களுக்காக பொருத்தமான பிராயச்சித்தங்கள் நம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம் ஸநாதன தர்மத்தை அனுஷ்டிக்காமல் இருந்ததற்காக பொருத்தமான பிராயச்சித்தங்களை ஒருவன் முதலில் மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு புனிதமான கங்கையில் ஸ்நானம் செய்து நம்முடைய சாஸ்திரங்களில் சிரத்தை வைத்துக் கொண்டால் அவர்களை மீண்டும் இந்துக்களாக கருதுவதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

சிஷ்யர்:
அவர்களை இந்துக்களாக ஒப்புக் கொள் வதற்காக நியமங்களுடன் கூடிய மதம் மாற்றும் முறை ஒன்று இருந்தால் நன்றாக இருக்காதா?
ஆச்சாரியாள்: நன்றாகவே இருக்காது. ஏனென்றால் அவர்கள் இந்து மதத்தை விடவே இல்லை என்ற சாஸ்திரங்களைக்கிணங்க இருக்கும் நமது கருத்துக்கு அது முற்றிலும் முரண்பாடாக இருக்கும்.

சிஷ்யர்:
வெளிநாட்டவர்கள் எந்நாளும் இந்துக்களாக இருக்கவில்லை‌.அவர்களை இந்து மதத்திற்குச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது செய்ய முடியுமா?
ஆச்சாரியாள்:
நமது ஓர் அரசன் வெளிநாட்டை வென்றால் அந்நாட்டு மக்களும் நம் சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்ட சாமானிய தர்மங்களை அனுஸரிப்பதற்குத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று மனு கூறியிருக்கிறார். இதன்படி வெளிநாட்டைச் சேர்ந்த எவர்கள் நம் இந்து மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களை இந்துக்களாகக் கருதுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அவர்களும் சாமான்ய தர்மங்களைப் பின்பற்றுவதற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories