கங்கையில் எப்படி குளித்தால் பாவம் போகும்? ஆச்சார்யாள் பதில்!

abinav vidhya theerthar 1 - 2026

சிஷ்யர்: கங்கை ஒருவனின் பாவங்களைப் போக்குகிறது என்று நம்பப்படுகிறது இது உண்மையாகவே அவ்வாறு ஆகிவிடுமா?

ஆச்சாரியாள்: ஆம் அதுபற்றி சந்தேகம் என்ன?

சிஷ்யர்: அப்படி ஒருவனின் பாபத்தைப் போக்கிவிடும் என்றால் எந்த பாவத்தை வேண்டுமானாலும் செய்து விட்டு அதற்குப் பிறகு கங்கையில் ஸ்நானம் செய்து கொள்ளலாமே..?

ஆச்சார்யாள்: கங்கையில் செய்த ஸ்நானம் அறியாமையால் செய்யப்பட்ட பாவங்களைப் போக்கிவிடும். மேலும் அறிந்து எப்போதாவது செய்யப்பட்ட எந்த பாவங்களுக்காக வருகிறோமோ அந்த பாவங்களையும் போக்கி விடும். கங்கையில் ஸ்நானம் செய்து பாவங்களை போக்கிக் கொள்வேன் என்ற எண்ணத்தோடு வேண்டுமென்றே செய்யப்பட்ட பாவங்களிலிருந்து கங்கை விடுதலை தருவாள் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. இவ்வாறு கூறுவதில் இருந்து கங்கையின் மகிமையைப் பற்றி சற்றும் சந்தேகப்பட வேண்டாம்‌ கோடிக்கணக்கான மக்கள் வெகு தூரம் பிரயாணம் செய்து கங்கை என்னை புனிதமாக்குவாள் என்று தீவிரமான சிரத்தையுடன் செல்கிறார்கள். இறைவன் அவர்களுடைய சிரத்தையை வீண்ணாக்குவதற்கு விரும்பமாட்டான்.

இது சம்பந்தமாக ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு. பார்வதி ஒரு சமயம் பரமசிவனிடம் எல்லோருடைய பாவங்களையும் கங்கை நீக்கி விடுவாளா என்று கேட்டாள். சிவன் பார்வதியை அழைத்துக்கொண்டு ஒரு கிழவர் வேடம் பூண்டு வந்து தான் ஆற்றில் முழுகுவதாக நடிப்பதாகவும் பார்வதி தன்னை காப்பாற்ற அங்கு போவோர் வருவோரை அழைக்குமாறும் கூறினார். மாறுவேடத்தில் இருந்த பார்வதியும் ஆற்றில் முழ்கியவாறு இருக்கும் தன் கணவரை காக்க யாரேனும் வருவார்களா என கூக்குரல் இட்டாள்.

மக்கள் அங்கு வந்தனர். அன்னை யார் பாவம் சிறிதுகூட செய்யவில்லையோ அவர்தான் என் கணவரை தொடலாம் என்று கூறினாள். எல்லோரும் தயங்க அங்கு வந்த ஒரு மனிதர் சற்றும் தயங்காமல் ஆற்றின் நீரில் நீந்திச் சென்று சிவனாகிய கிழவரை காப்பாற்றினார். அந்த மனிதரை நோக்கி உங்களுக்கு பாவங்களே இல்லையா என பார்வதி வினவ நான் உங்கள் கணவரை காப்பாற்றுவதற்கு முன் கங்கையில் மூழ்கி தானே சென்றேன். அப்பொழுதே என் பாவங்கள் போய்விட்டன என்று சொல்லிச் சென்றாராம். பரமசிவன் பார்வதியிடம் இவரை போன்ற சிரத்தை இருந்தால் பாவங்கள் எல்லாம் போய்விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று பதிலுரைத்தார். கங்கையின் மகிமை அத்தகையது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories