February 15, 2025, 4:55 AM
24.3 C
Chennai

மனமுருகி வேண்டு..! இறையருகே உண்டு!

jeyadevar
jeyadevar

ஸ்ரீஜயதேவர், கி.பி. 12 ம் நூற்றாண்டில் பூரி க்ஷேத்திரத்தின் அருகில் பில்வகாம் என்கிற ஊரில் வசித்து வந்த நாராயண சாஸ்திரியார் – கமலாம்பாள் என்கிற திவ்ய தம்பதிகளுக்கு ஜயதேவர் திருக்குமாரராக அவதரித்தார்.

இவர்களுக்கு நெடுநாட்களாக புத்திர பாக்யம் இல்லை. இவர்கள் பூரி ஜெகந்நாதரை இடைவிடாது வழிபட, திருமால் அருள்கூர்ந்து, இறை அம்சமும், வேத வியாசரின் வடிவாகவும் ஜயதேவர் அவதரித்தார்.

ஜெயதேவருக்கு பத்மாவதி என்கிற பெண்ணை மணமுடித்தார்கள். அதிதிகளுக்கு தான தருமம் செய்து வந்தார். ஜயதேவருக்கு கண்ணனுடைய லீலா விநோதங்களைப் பாடலாகப் பாட, அதற்கு பத்மாவதி அபிநயம் செய்து ஆடுவாள்.

ஜயதேவர் காலத்தில் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் கவி பாடும் திறன் கொண்டவன். அவனும் ஜகன்னாதர் மேல் பல கவிகள் பாடி இருந்தான். ஜயதேவரின் பாடல்கள் மட்டும் வேதமாக கருதி மக்கள் பாடி வருவதைக் கண்டு வெகுண்டான்.

உடனே “மக்களே…. எனது அரசாணையில் எனது பாடல்களை மட்டுமே நீங்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான். ஆயின் மக்கள் ஜயதேவரின் பாடல்களைத் தவிர வேறு பாடல்கள் பாட இயலாது என சொன்னார்கள்.

அது கேட்டு கோபமுற்ற அரசன் மக்களையும், பண்டிதர்களையும், மிகவும் துன்புறுத்தி, கண்டிப்பாக தனது பாடல்கள் ஒலிக்க வலியுறுத்தினான். இதைக் கேட்ட பண்டிதர்கள் நீங்கள் இயற்றிய பாடல்களை பகவான் ஏற்றுக் கொண்டால் நாங்களும் பாடுகிறோம் என்றனர்.

உடன் ஐயதேவரின் பாடல்களையும், அரசர் பாடிய பாடல்களையும் கருவறையில் ஜகந்நாதரின் திருவடிகளில் வைத்து இரவு கோயில் கதவை மூடினர்.

மறுநாள் காலை கோயில் கதவைத் திறந்தால், மன்னனின் பாடல்கள் கோயிலில் ஆங்காங்கு தாறுமாறாக வீசப்பட்டிருந்தன. ஜயதேவரின் பாடல்கள் ஜகன்னாதரின் திருவடியில் இருந்தது. அப்பாடல்களை ஜகந்நாதர் பிரித்து படித்து, யாம் இதை ஏற்றுக் கொண்டோம். என்ற குறிப்பு திருமாலால் எழுதப்பட்டு இருந்தது.

என்னே… ஆச்சரியம்! இவ்வளவு அன்புக்கு ஏற்பு உடையவர் ஐயதேவரே… என வாழ்த்துவது போல் பகவான் அருளினார். என்னே அவர் செய்த பாக்யம்! அதாவது ஐயதேவர் ஆழ்ந்த பக்தியுடன் எழுதிய பாடல்களை பகவான் ஏற்றார் எனலாம்.

கலி காலத்தில் பக்தியுடன் நாம சங்கீர்த்தனம் ஒன்றுதான். நாம் இந்த சம்ஸார சாகரத்தில் இருந்து விடுபட முடியும். என்பதை ஜயதேவர் போன்ற மகான்கள் உணர்த்தி உள்ளார்கள்.

தன் பிழையை உணர்ந்த மன்னன் வருந்தி இறைவனிடம் மன்னித்து அருள வேண்டினான். திருமாலும் அவனின் இந்த நல்ல நோக்கத்தைக் கண்டு அவன் எழுதிய பதிமூன்று பாடல்களை ஏற்றுக் கொண்டார்.

அதாவது மனமுருகி வேண்டினால் இறைவன் அருளுவான் என்பதாகும். ஜயதேவர் பத்மாவதி திவ்ய தம்பதிகள் இறைவனோடு ஏக காலத்தில் இரண்டறக் கலந்து விட்டனர்.

கணவனின் சொல் கேட்டு மனைவி நடப்பதும், மனைவியின் சொல் கேட்டு கணவன் நடப்பதும் அவ்வாறு இந்த கலி யுகத்தில் கிடைப்பது அதிசயத்திலும் அதிசயம்.

இந்த பாக்யம் அடைய இந்த தம்பதிகள் போல் நாமும் வாழ்ந்து பகவானின் அருள் பெற வேண்டும். பக்தியுடன் பரந்தமானை அனுதினம் பாராயணம் செய்பவர்களும், கேட்பவர்களும், திருமாலின் அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories