December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

இதயத்தில் வைத்தால் இடைவெளி ஏன்..?

Thirupathi 4
Thirupathi 4

திருக்குடந்தை தேசிகன் என்னும் மகான் கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார்.

அவர் ஒப்பிலியப்பன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார் .

வடநாட்டு யாத்திரை செல்ல விரும்பிய திருக் குடந்தை தேசிகன், தனது மூன்று சீடர்களை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டார்.

முதலில் திருமலையை அடைந்த திருக்குடந்தை தேசிகன், அங்கே திருவேங்கடமுடையானைத் தரிசித்துவிட்டு ஆழ்வார் தீர்த்தம் என்று அழைக்கப்படும் அருவிக்கு அருகே தம் சீடர்களுடன் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டி ருந்தார்.

வயது முதிர்வால் எனது உடல் தளர்ந்து விட்டது. இந்நிலையில் நான் எப்படி மேற்கொண்டு அயோத்தியா, மதுரா, பிருந்தாவனம், பத்ரிநாத் உள்ளிட்ட தலங்களுக்கெல்லாம் செல்வேன்?” என்று வருத்தத்துடன் தம் சீடர்களிடம் சொன்னார் திருக்குடந்தை தேசிகன்.

அப்போது அங்கே வந்த யாத்திரிகர் ஒருவர், திருக்குடந்தை தேசிகனை வணங்கினார்.

சுவாமி! அடியேன் நம்மாழ்வாருடைய அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரியில் இருந்து வருகிறேன். இங்கே நம்மாழ்வார் பெயரில் ஒரு அருவி இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.

அருகிலிருந்த ஆழ்வார் தீர்த்தத்தைக் காட்டிய திருக்குடந்தை தேசிகன், “இது தான் நம்மாழ்வாரின் திருநாமத்தால் வழங்கப்படும் ஆழ்வார் தீர்த்தம்!” என்று கூறினார்.

மேலும், “நம்மாழ்வார் திருமலையைப் பற்றித் தம் திருவாய்மொழியில் பாடுகையில்,

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவி திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே” என்று பாடினார்.

திருமலையிலுள்ள அருவிகளில் நீர் பாயும் போது எழும்புகின்ற ஒலியானது, திருமலையப்பனுக்குத் தொண்டு செய்ய வாருங்கள்! வாருங்கள்! என்று அடியார்களை அழைப்பது போல உள்ளது.

அத்தகைய திருத்தலமாகிய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலையப்பனுக்கு நாம் எல்லா நேரங்களிலும் அனைத்து விதமான கைங்கரியங்களும் செய்ய வேண்டும் என்பது இப்பாசுரத்தின் கருத்து.

இப்பாசுரத்தில் திருமலையிலுள்ள அருவியின் ஒலி, மலையப்பனுக்குத் தொண்டு செய்ய வருமாறு தம்மை அழைப்பது போல் ஆழ்வார் உணர்ந்தமையால், அந்த அருவியில் அவருக்குள்ள ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, ஆழ்வார் தீர்த்தம் என்று அவரது திருநாமத்தை இந்த அருவிக்குப் பெரியோர்கள் சூட்டினார்கள்!” என்றார் திருக்குடந்தை தேசிகன்.

திருக்குடந்தை தேசிகன், “நம் இதயத்தில் உறையும் பரந்தாமனை எப்போதும் அனுபவிக்கும் ஒருவன், மேற் கொண்டு இறைவனைத் தேடிக் கங்கைக்கோ குருக்ஷேத்ரத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஐயா…. தேசிகரே…. “உங்கள் கேள்விக்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்களே!” என்று சொல்லிச் சிரித்த யாத்திரிகர், திடீரென மறைந்து விட்டார்.

யாத்திரிகர் வடிவில் வந்தவன் பரந்தாமன் மலையப்பன் ஆம்! “உடல் தளர்ந்த நிலையில் எப்படி வடநாட்டுக்கு யாத்திரை செல்வது?” என்று திருக்குடந்தை தேசிகன் கேள்வி கேட்டு வருந்தினாரல்லவா? அவர் வாயாலேயே அதற்கான விடை வந்துவிட்டது.

இதயத்திலிருக்கும் இறைவனை அனுபவிப்பவர்கள் தனியாக இறைவனைத் தேடி யாத்திரை செல்ல வேண்டியதில்லை!” என்று திருக்குடந்தை தேசிகன் தம் வாயாலேயே கூறிவிட்டார்.

எனவே வருத்தம் நீங்கிக் கும்பகோணத்துக்குத் திரும்பிய அவர், அங்கே எழுந்தருளியிருக்கும் பரந்தாமனான ஆராவமுதப் பெருமாளுக்குத் தொண்டு செய்தபடித் தம் இதயத்தில் வைத்து வாழ்நாளைக் கழித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories