December 22, 2025, 12:24 AM
23.8 C
Chennai

கெட்டவருக்கு இன்பமும்.. நல்லவர்க்கு துன்பமும் ஏன்?

bheesmar
bheesmar

நம்மில் பலருக்கு, மனிதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ‘எனக்கு மட்டும், கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார் .
அடுத்தவர்கள் எல்லாம் நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர்.

இதே போன்ற எண்ணம், மஹாபாரதத்தில், பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

குருஷேத்திர யுத்தம் முடிந்து விட்டது. பிதாமகர் பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்திருந்தார்.

தை மாத ரத ஸப்தமி நாளில் இறப்பதற்காக காத்திருந்தார்.

ஒருநாள், தருமன் உட்பட பாண்டவர்கள், பீஷ்மரை சந்தித்தனர்.

நலம் விசாரித்த பீஷ்மர், ‘உங்கள் லட்சியம் நிறைவேறி விட்டதா’ என்று கேட்டார்.

இதற்கு தருமன் சிரித்தான்.
‘தாத்தா! நாங்கள் தருமத்தின் பாதையில்தானே நின்றோம்.

எங்களுக்கு உள்ள பங்கை தர மறுத்து துரியோதனன் துன்புறுத்தினான்.தருமம் வெல்ல, நாங்கள் அடைந்த கஷ்டங்கள், துயரங்கள் உங்களுக்கு தெரியாதா?.

அவ்வளவு கஷ்டங்கள் அடைய, நாங்கள் செய்த தவறு என்ன ?.
தவறு செய்த துரியோதனன், கடைசி வரையில் மகிழ்ச்சியாக தானே இருந்தான்’ என, கேட்டான் தருமன்.

மற்ற நான்கு பேரும், ‘ஆமாம் தாத்தா, நல்ல வழியில் நடந்தால், கஷ்டங்கள் அனுபவிக்கதான் வேண்டுமா‘ என, கேட்டனர். பீஷ்மர் சிரித்து விட்டு, பதில் அளித்தார்.

‘பேரக் குழந்தைகளே!
நீங்கள் வாழ்வில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து விட்டுதான், இன்று வெற்றி பெற்று உள்ளீர்கள்.

இதை நான் மறுக்கவில்லை.
ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும்,நீங்கள் நிம்மதியை இழக்கவில்லை.

bheesmar 1
bheesmar 1

அதர்ம பாதையில் செல்லவில்லை.
கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் நீங்கள் மகிழ்ச்சியை இழந்தீர்களா?.

13 ஆண்டு வன வாசம் இருந்த போது கூட நீங்கள் மகிழ்ச்சியாகதான் இருந்தீர்கள்.

ஆனால், துரியோதனன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை.
ஆனால், அவன் நிம்மதியாக இருந்தானா?.

எந்நேரமும் உங்களை பற்றியே நினைத்துக் கொண்டு, உள்ளூர பயந்து கொண்டே இருந்தான்.

உங்களுக்கு தீமை செய்வதில்தான், அவனது முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தன.

துரியோதனனால், உங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதேல்லாம், உங்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றினார்.

நல்ல எண்ணங்களுடன் நீங்கள் இருந்ததால், உங்கள் பக்கம் கடைசி வரை இறைவன் கூடவே இருந்தான்.
ஆனால், துரியோதனன் பக்கம் அவன் ஒரு போதும் இல்லை.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பது, அவர்களின் திறமையை வெளிப்படுத்ததான்.

பல கஷ்டங்களை அனுபவித்த போதும், நீங்கள் தருமத்தின் பாதையை விட்டு அகலாமல் இருந்ததால், பெரும் பெயரும் புகழும் பெற்றுள்ளீர்கள் என கூறி முடித்தார் பீஷ்மர். உண்மைதான்.

ஆண்டவன் நமக்கு கஷ்டம் கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கை விட மாட்டான் என்ற நம்பிக்கை திடமாக இருந்தாலே போதும் மனதில் எந்த சந்தேகமும் துளி கூட வராது. இதுவே பகவத்கீதை சொல்லும் உண்மையான சரணாகதியின் சாரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

The Vanishing Votaries of the December Durbar!

On Saturday, 20 December 2025, at four in the afternoon, the hall listened attentively to Dushyanth Sridhar—BITS Pilani alumnus, best-selling author, director of dance productions,

ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

Entertainment News

Popular Categories