திருச்செந்தூர் முருகன் கோயிலில்   வருஷாபிஷேகம்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

WhatsApp Image 2023 02 09 at 11.jpeg - 2026

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  தை உத்திர நட்சத்திரத்தில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தனர்.
எனவே ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

images 2023 02 09T133116.002 - 2026
images 2023 02 09T133032.557 - 2026

இந்த ஆண்டு இன்று தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

அதன்பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்குக் கொண்டு வரப்பட்டு, காலை 9.20 மணிக்கு மூலவருக்கும் தொடர்ந்து சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சி கால  அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது தொடர்ந்து மாலை 4 மணி அளவில் சுவாமி ராஜ அலங்காரத்தில் சாயராட்சை திபாராதனை நடைபெறும். பின்னர் முருகப் பெருமானும், தெய்வானையும் தனித்தனியாக தங்கமயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார்கள்.இரவு புஷ்பாஞ்சலி வழிபாடு விமர்சையாக நடைபெறும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img