செங்கோட்டை ஸ்ரீ நவநீதகிருஷ்ண ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

sengottai sri navaneethakrishnaswami temlple kumbabishekam
sengottai sri navaneethakrishnaswami temlple kumbabishekam

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை இன்று காலை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது இதில் பிரதான ஹோமத்தைத் தொடர்ந்து பிம்ப சுத்தி, ரக்ஷாபந்தனம், பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன.

sengottai krishnan temple kumbabishekam2 - 2026
#image_title

தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது நவநீத கிருஷ்ண ஸ்வாமி சந்நிதி விமானத்திற்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக வைபவத்தில் பெருந்திரளான நண்பர்கள் கலந்து கொண்டார்கள். மூலவராக வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கு அபிஷேகம், தீபாராதனை செய்விக்கப்பட்டது.

முன்னதாக கும்பாபிஷேக வைபவம் கடந்த மே மாதம் 25ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்கியது. ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த வைபவத்தில் ஆறு கால யாக பூஜைகளுடன் நான்கு வேத பாராயணம், யாகசாலை பூஜைகளுடன் மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.

sengottai krishnan temple kumbabishekam4 - 2026
#image_title

கும்பாபிஷேக வைபவத்தை முன்னிட்டு, ஏழு நாட்களாக பாகவத சப்தாகம் என மே 25ஆம் தேதி தொடங்கி இன்று வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நவநீத கிருஷ்ண ஸ்வாமி சன்னிதி வசந்த மண்டபத்தில் மகாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமியின் சீடர் பிரம்மஸ்ரீ கதாதரன் மற்றும் பிரம்மஸ்ரீ ஸ்ரீதர் சர்மா ஆகியோரின் பாகவத உபன்யாசம் நடைபெற்றது

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!
sengottai krishnan temple kumbabishekam5 - 2026
#image_title

தினமும் மாலை கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு, ஆகியவற்றுடன் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அனந்த பத்மநாபன் மற்றும் முத்துகிருஷ்ணன் தலைமையிலான விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories