கோடைவிடுமுறை -திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், இலவச மோர், சிற்றுண்டி ஏற்ப்பாடு

thiruppathi - 2026

திருப்பதி ஏழுமலையானை கோடை விடுமுறையில் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசராஜு தலைமையில் அனைத்து தேவஸ்தான துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கோடை விடுமுறையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து , ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோடை விடுமுறையையொட்டி, இம்மாதம் 15-ம் தேதி முதல், ஜூலை மாதம் 16-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள் என்பதால், பிரதி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ஜூலை 16-ம் தேதி வரை, சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. விஐபி பக்தர்கள் அவர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், இலவச மோர், சிற்றுண்டி, உணவு வசதிகள் செய்யப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படுகிறது. உயர் ரக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த கோடைக்காலத்தில் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் இருப்பில் இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரத்திற்கு 1.27 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.என இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories