மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டன. 10ஆம் வகுப்பு மானவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. இதனையடுத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை...