யுத்தத்தில் பகவத் கீதை சொல்ல எத்தனை நாட்கள் பிடித்தது?

ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திரப் போரின் போது அர்ஜுனனுக்கு எத்தனை நாட்களில் கீதோபதேசம் செய்தார் என்பது பலருக்கும் எழும் ஐயம். ஏனென்றால் அத்தனை பெரிய பகவத் கீதையை சொல்லுவதற்கு அவருக்கு எத்தனை நாள் பிடித்தது என்று சந்தேகம் வருகிறது பலருக்கும்.
யுத்தம் தொடங்கிய அன்று இரண்டு படைகளும் யுத்த பூமியில் நுழைந்த உடனேயே சண்டை ஆரம்பித்து விடவில்லை. முதலில் சின்னச் சின்ன சில சம்பவங்கள் நிகழ்ந்தன. அர்ஜுனனின் விருப்பத்திற்கிணங்க இரண்டு படைகளுக்கும் இடையில் ஸ்ரீ கிருஷ்ணன் ரதத்தை கொண்டு வந்து நிறுத்தினான். அவர்கள் இருவரும் உரையாடும் விதமாக கீதோபதேசம் நிகழ்ந்தது.
அதன் பின் தர்மபுத்திரன் ரதத்தை விட்டிறங்கி நடந்து சென்று சகோதரர்களோடு சேர்ந்து எதிரிப் படை அருகில் நெருங்கி அங்கிருந்த பீஷ்மர், துரோணர் போன்ற குரு வம்சப் பெரியவர்களை வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினான். அதன் பிறகு எதிரித் தரப்பில் இருப்பவர் யாராவது சரணடைந்தால் அபயம் அளிப்பதாக ரதத்தின் மீது ஏறி தர்மன் பிரகடனம் அறிவித்தான். அப்போது யுயுத்ஸு பாண்டவர் பக்கம் சேர்ந்தான்.
அதற்குப் பிறகு யுத்தம் ஆரம்பமானது.
கீதையில் 700 சுலோகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சாதாரண வேகத்தில் படித்தால் ஒன்றரை மணி நேரத்தில் பூர்த்தி செய்யலாம். இந்த சுலோக எண்ணிக்கையில் நூற்றுக்கு மேல் ‘சஞ்சய உவாச’ என்று சஞ்சயன் திருதிராஷ்டிரனுக்குக் கூறிய வர்ணனைகளும் விமரிசனங்களும் உள்ளன.
அதை எல்லாம் நீக்கிப் பார்த்தால் ஸ்ரீ கிருஷ்ணனின் உபதேசம் அறுநூறுக்கும் குறைவே. இந்த பாகத்தைப் படிக்க வேண்டுமென்றால் ஒரு மணி பத்து நிமிடத்தைத் தாண்டாது. ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்குப் பிடிக்கும் நேரத்தை விட மனப்பாடம் செய்து படிப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மேலும் பேசும் விஷயத்தை வியாச மகரிஷி சந்தஸ் என்ற செய்யுள் வடிவில் எழுதி உள்ளார். கிருஷ்ணர் கூறிய விஷயங்களை அழுத்திச் சொல்லுவதற்காக சில உபநிஷத் வாக்கியங்களைக் கூட சேர்த்துள்ளார் வியாசர். இவ்விதம் கவனித்தால் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் செய்த சம்பாஷனை மிஞ்சிப் போனால் பதினைந்து இருபது நிமிடங்களே பிடித்திருக்கும். தத்துவ சாஸ்திரமான பகவத் கீதையை பல நாட்கள் தொடர்ந்து உபன்யாசங்கள் செய்து வருகிறார்கள் பெரியோர்கள். கிருஷ்ணர் மட்டும் பல நாட்கம் உபதேசம் செய்யவில்லை.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories