பரமசிவனிடம் கேள்வி பாணங்கள்

Published:

ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் அவையில் இருந்த அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு புலவர்களுள் ஒருவர் மகாகவி தூர்ஜடி.
அவர் தெலுங்கில் எழுதிய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சதகத்தில் பரமசிவன் மேல் கேள்வி பாணங்களை விடுத்து தன்னை ஆட்கொள்ளும்படி பிரார்த்திக்கிறார். அவற்றிலிருந்து இரண்டு சுவையான செய்யுட்கள்:-
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! பாணாசுரனைப் போல உன்னை என் வாசற்படியருகில் காவலில் இருத்தினேனா? அப்சரசுகள் மீது மோகத்தால் அவர்களிடம் உன்னை தூது விடுத்தேனா? திண்ணனைப் போல் எச்சில் மாமிசம் தின்றால் தான் ஆயிற்று என்று பலவந்தம் செய்தேனா? என்ன அபராதம் செய்தேன்? நல்லவர்களை காக்கும்படி வேண்டினேன். அவ்வளவு தானே? என் பிரார்த்தனையை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பதேன்?

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா! உனக்கு மாமிச உணவின் மேல் விருப்பம் இருந்தால் உன் ஒரு கையிலே மான் உள்ளது. மறு கையிலே கூர்மையான பரசு உள்ளது. உன் நெற்றிக் கண்ணில் நெருப்புள்ளது. தலை மேல் நீர் உள்ளது. சிறிது சிரமப்பட்டால், உன் கையில் உள்ள கபாலத்தில் மான் மாமிசத்தை சமைத்து உண்டிருக்கலாமே! ஏன் அந்த திண்ணனின் எச்சில் மாமிசத்தின் மேல் ஆசை கொண்டாய்? உன் தகுதிக்கு அது இழுக்கல்லவா? இது போல் நீ செய்யலாமா?”

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

-ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img