December 6, 2025, 7:20 AM
23.8 C
Chennai

IPL 2025: மும்பை அணியின் முதல் வெற்றி

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs மும்பை – மும்பை – 31.03.2025

மும்பை அணியின் முதல் வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணியை (16.2 ஓவரில் 116, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 26, ரமந்தீப் சிங் 22, மனீஷ் பாண்டே 19, ரிங்கு சிங் 17, அஷ்வினி குமார் 4/24, தீபக் சாஹர் 2/19, ட்ரெண்ட் போல்ட், ஹார்திக் பாண்ட்யா, விக்னேஷ் புதூர், மிட்சல் சாண்ட்னர் தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (12.5 ஓவரில் 121/2, ரியான் ரிக்கிள்டன் 62, சூர்யகுமார் யாதவ் 27, ரோஹித் ஷர்மா 13, வில் ஜேக்ஸ் 16, ஆண்ட்ரே ரசல் 2/35) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஏராளமான அதிரடி மட்டையாளர்களைக் கொண்ட கொல்கொத்தா அணி மும்பை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மும்பை அணிக்காக நேற்று முதன் முறை களமிறங்கிய அஷ்வின் குமார், 3 ஓவர்கள் வீசி, 24 ரன் கள் கொடுத்து 4 விக்கட்டுகள் சாய்த்தார்.

கொல்கொத்தா அணியில் நாலு வீரர்கள் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்றவர்களான கிவிண்டன் டி காக் (1 ரன்), சுனில் நரேன் (பூஜ்யம் ரன்), வெங்கடேஷ் ஐயர் (3 ரன்), ஆண்ட்ரூ ரசல் (5 ரன்), ஹர்ஷித் ராணா (4 ரன்), ஸ்பென்சர் ஜான்சன் (1 ரன்) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் குஜராத் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 116 ரன் மட்டுமே எடுத்தது.

          117 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (12 பந்துகளில் 13 ரன்) எடுத்து ஆட்டமிழந்தார். இவர் தொடக்கத்தில் அணியில் இடம்பெறவில்லை. பின்னர் இம்பாக்ட் பிளேயராக மட்டையாட வந்தார். அவரோடு களமிறங்கிய ரியன் ரிக்கிள்டன் (41 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), அவருக்குப் பின் வந்த வில் ஜேக்ஸ் (17 பந்துகளில் 16 ரன்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (9 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோரின் அதிரடியாக ஆடியதால் மும்பை அணி 12.5 ஓவர்களிலேயே இரண்டு விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

          பேட்டிங் பவுலிங் இரண்டிலும் எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் எனத் தெரியாமல் மும்பை அணி தடுமாறுகிறது. ரோஹித் ஷர்மா ஃபார்மில் இல்லை. பும்ரா இல்லாத குறை பந்துவீச்சில் தெரிகிறது.

          அணியின் வேகப் பந்துவீச்சாளர் அஷ்வின் குமார்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories