IPL 2025: பஞ்சாப் அணி அபார வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs பஞ்சாப் – லக்னோ – 01.04.2025

பஞ்சாப் அணி அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (171/7, நிக்கோலஸ் பூரன் 44, ஆயுஷ் பதோனி 41, எய்டன் மர்க்ரம் 28, அப்துல் சமத் 27, டேவிட் மில்லர் 19, அர்ஷதீப் சிங் 3/43, ஃபெர்கூசன், மேக்ஸ்வெல், ஜேன்சன், சாஹல் தலா ஒரு விக்கட்) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (16.2 ஓவரில் 177/2, ப்ரப்சிம்ரன் சிங் 69, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 52, நெஹல் வதேரா ஆட்டமிழக்காமல் 43, திக்வேஷ் ரதி 2/30) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரோடு களமிறங்கிய எய்டன் மர்க்ரம் (18 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். ரிஷப் பந்த் (2 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை.

ஆயுஷ் பதோனி (33 பந்துகளில் 41 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), டேவிட் மில்லர் (18 பந்துகளில் 19 ரன்), அப்துல் சமத் (12 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆகியொரும் சிறப்பாக ஆடினர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது..

          172 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ப்ரியன்ஷ் ஆர்யா (9 பந்துகளில் 8 ரன்) எடுத்து ஆட்டமிழந்தார். அவரோடு களமிறங்கிய ப்ரப் சிம்ரன் சிங் (34 பந்துகளில் 69 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) அடித்தார்.

அவரோடு இணைந்து விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் (30 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அவருக்குப் பின் வந்த நெஹல் வதேரா (25 பந்துகளில் 43 ரன், 3ஃபோர், 4 சிக்சர்) ஆகியோரின் அதிரடியாக ஆடியதால் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களிலேயே இரண்டு விக்கட் இழப்பிற்கு 177 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

          பஞ்சாப் அணியின் மட்டையாளர் ப்ரப் சிம்ரன் சிங்  ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories