நீட்டிப்பார்களா..?!

annamalai in trichy meeting - 2026

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நீடிப்பாரா?

ஒரு அளவுக்கு மேல் மற்ற ஒருவர் எப்படிச் செயல்படுவார் என்பதை நமது அன்றாட வாழ்வில் கூட நாம் நூறு சதவிகிதம் சரியாகச் சொல்ல முடியாது. நாம் நாம்தான், அடுத்தவர் அடுத்தவர்தான்.

அரசியல் உலகில், ஒரு கட்சித் தலைவர் எடுக்கும் முடிவுகளைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை, நம் போன்ற பொது மக்களைப் பொறுத்தவரை, இன்னும் அதிகமாக இருக்கும்.

அடுத்தவர் முடிவைப் பற்றிய இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, யாரும் அதைப் பற்றி எந்த ஹேஷ்யமும் துணிந்து செய்யலாம். அதுவும் வேலையும் பொறுப்பும் இல்லாதவர்கள், பற்ற வைப்பவர்கள், கற்பனாவாதிகள், காக்கா, குருவி, கழுகு பட்சிகள் போன்றோர் குஷியாக ஒன்று செய்யலாம். அதாவது, பழனிசாமியுடனும் அண்ணாமலையுடனும் அமித் ஷா பேசும்போது காற்றோடு காற்றாகக் கலந்து யார் கண்ணிலும் படாமல் அவர்களுக்கு நடுவில் மிதந்தபடி அவர்களின் உரையாடல்களைக் குறித்துக் கொண்டு அவர்களின் முகபாவங்களையும் மனதில் பதித்து வைத்த மாதிரி, செய்திகள் உலவ விடலாம்.

அமித் ஷா என்ற மூன்றாம் மனிதர் அந்தக் கற்பனாவாதிகள் எழுதுகிற முடிவைத் தானே – மோடியைத் தவிர யாரிடமும் சொல்லாமல் – எடுக்கலாம். அமித் ஷா அப்படி ஒரு முடிவை – அதாவது, அண்ணாமலை பாஜக தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது மாதிரியான முடிவை – தானாக, முன்கூட்டி வெளி உலகிற்குத் தன் முடிவைக் கசியவிடாமல், எடுத்துப் பின்னர் அறிவித்தால், “பார்த்தீர்களா, நாங்கள் முன்னமே இதைக் கரெக்டாக சொல்லிவிட்டோம்!” என்று ஹேஷ்ய எழுத்தாளர்கள் தம்மைத் தாமே மெச்சிக் கொள்ளலாம்.

ஒருவேளை, கற்பனாவாதிகள் எழுதியபடி ஒன்றும் நடக்கவில்லையா, அவர்கள் இன்னொரு திருப்பத்தை உடனே உண்டுபண்ணலாம். “கடைசி நேரத்தில் மோடி குறுக்கிட்டு அமித் ஷாவின் முடிவை மாற்றி விட்டார்!” என்று கற்பனாவாதிகள் ஒரு போடு போடலாம் – அதை நம்பவும் தமிழகத்தில் நிறைய மனிதர்கள் உண்டு!

நாம் இப்போது சரியாக செய்யத் தக்கது ஒன்றுதான். அரசியல் உலகில் என்ன நடக்கிறது, என்ன ஆகப் போகிறது, என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போதைக்கு அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்.

ஆர். வி. ஆர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories