December 5, 2025, 7:08 PM
26.7 C
Chennai

திருப்பரங்குன்றம் கோவிலில் ஏப்.7 முதல் மூலஸ்தான பகுதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை!

thirupparankundram thai poosam - 2025

திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூலை 14-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடப்பதை முன்னிட்டு, வரும் ஏழாம் தேதி முதல் மூலஸ்தானம் பகுதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி 30 ஆம் நாள் (ஜூலை 14 ஆம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி கோயில் ஆலய ராஜகோபுரம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருக்கோயில் மூலஸ்தானத்தில் உள்ள தாய்பாறையில் செதுக்கப்பட்டுள்ள மூல விக்கிரகங்களுக்கு. கல்கம் அதாவது கடுசக்கரை சாத்தும்பணி, மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மராமத்து பணி மற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ளது.

இந்தத் திருப்பணிகள் செய்ய வசதியாக, பங்குனி மாதம் 26 ஆம் நாள் ஏப்ரல் 9 ஆம் தேதி மூலாலய பாலஸ்தாபனம் செய்யப்படவுள்ளது. மூலாலய பாலஸ்தாபனத்தை முன்னிட்டு, திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம். சண்முகர் சண்முகர் சன்னதி ஆகிய மண்டபகங்களிலுள்ள உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் கலாகர்ஷணம் செய்யப்பட்டு, சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிக மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு அனைத்து தெய்வங்ககளின் தாருபிம்பத்திற்கு (மூலவர் அத்தி மரச்சிற்பங்கள்) மூலஸ்தானத்தில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் வழக்கம் போல், ஆகம விதிப்படி நடைபெறும் என, இத்திருக்கோயில் ஸ்தானிக பட்டர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மூலஸ்தான பாலாலயத்தை முன்னிட்டு வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் பாலாலய யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு ஜூலை 14-ஆம் தேதி திருக்குடமுழுக்கு பணிகள் முடியும் வரை திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய இடங்களில் மராமத்து மற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ளதால், திருக்கோயில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் வழிபாட்டிற்கு ஏதுவாக சண்முகர் சன்னதி தற்காலிக மூலஸ்தானம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பாலாலயம் செய்யப்பட்டு கலாகர்ஷணம் செய்யப்பட்ட மூல விக்கிரகங்களின் தாருபிம்பங்கள் (மூலவர் அத்தி மரச்சிற்பங்கள்) மூலவராக பாவிக்கப்பட்டு தினந்தோறும் மூலஸ்தானத்தில் நடைபெறுவது போல் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் வழக்கம் போல் ஆகம் விதிப்படி நடைபெற உள்ளது.

எனவே, பக்தர்கள் சண்முகர் சன்னதியில் உள்ள மூலஸ்தானத்தில் வழிபாடு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருப்பணிகள் நடைபெறுவதற்கு ஏதுவாக இதற்கு முன்னர் நடைபெற்ற கும்பாபிஷேக திருப்பணிகளிலும் இதே போன்ற நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கடைபிடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories