இந்த கொல்லம் – சென்னை ரயில் நேரத்தை மாத்த மாட்டீங்களா?

Published:

railway news - 2026
#image_title

கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் குருவாயூர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொல்லத்திலிருந்து, செங்கோட்டை – ராஜபாளையம் – விருதுநகர் வழியாக மதுரைக்கு மிகக் குறைந்த நேர இடைவெளியுடன் இயக்கப்படுவதை நேரம் மாற்றி, இரு ரயில்களையும் இரண்டு மணி நேர இடைவெளியில் இயக்கினால், கொல்லம், தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்டைவர்.

இதன் காரணமாக, கொல்லம் – செங்கோட்டை ரயில் பாதையில், இரண்டு ரயில் சேவைகள் கொண்டிருப்பதன் பலனை பயணிகள் முழுமையாகப் பெறுவர். மேலும் கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் கொல்லத்திலிருந்து மிக விரைவாகப் புறப்பட்டு சென்னைக்கு மிக விரைவாக வந்து சேரும். விடுமுறைக்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு இது சிறிதும் உதவாத ஒரு அட்டவணை.

கேரளாவின் வடக்கு முனையிலிருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் இரண்டு வந்தே பாரத் ரயில்களுக்கு கொல்லம் புனலூர் வழித்தடத்திலிருந்து இணைப்பு ரயில்கள் கிடைக்காது.

இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் தீர்வு, கொல்லத்திலிருந்து கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி அல்லது அதற்குப் பிறகு என நிர்ணயிப்பதாகும். அந்த வழியில், வந்தேபாரத்திற்கு வருபவர்களுக்கு ஒரு இணைப்பு ரயிலும் கிடைக்கும், மேலும் இரண்டு ரயில்களுக்கும் இடையே சுமார் இரண்டு மணி நேர இடைவெளியும் இருக்கும்.

சென்னை எழும்பூருக்குள் அகால நேரத்தில் நுழையாமல், அதிகாலை 5 மணிக்கு நுழைந்து பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தலாம்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

கொல்லம் – செங்கோட்டை பாதை வழியாக நீண்ட தூர ரயில்களை பின்வரும் முறையில் கொண்டு வருவது அவசியம் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

1.சூரத்- திருநெல்வேலி (பனவேல், கொங்கன், ஆலப்புழா வழியாக) வாராந்திரம்

2.கொல்லம் – செகந்திராபாத் (செங்கோட்டை விருதுநகர் விழுப்புரம், ரேணிகுண்டா, குண்டூர் வழியாக) வாரம் இருமுறை ரயில் இயக்க வேண்டும்.

3.திருவனந்தபுரம் வடக்கு – தாம்பரம் ஏசி ரயிலை வாரம் முழுவதும் இயக்கப்படும் வழக்கமான ரயிலாக மாற்றம் வேண்டும்

4.கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் கொல்லம் புறப்பாடு சென்னை வருகை நேர மறுசீரமைக்க வேண்டும்.

5.திருவனந்தபுரம் வடக்கு – ஹூப்பள்ளி செங்கோட்டை மதுரை கரூர் வழியாக, பெங்களூர் SMVT) வார இருமுறை.

6.திருவனந்தபுரம் வடக்கு – மேட்டுப்பாளையம் செங்கோட்டை, பழனி, கோயம்புத்தூர் வழியாக இயக்க வேண்டும்

7.எர்ணாகுளம் – கோட்டயம் வழியாக வேளாங்கண்ணி தினசரி ரயில்

8.எர்ணாகுளம் – புதுச்சேரி வாரமிருமுறை கோட்டயம் செங்கோட்டை விருதுநகர் வழியாகவும்,

9.எர்ணாகுளம் – ஆலப்புழா கொல்லம் செங்கோட்டை விருதுநகர் வழியாக ராமேஸ்வரம் வாரம் மும்முறை யும்

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

10.திருவனந்தபுரம் வடக்கு – காச்சிகுடா செங்கோட்டை, கரூர், ஓசூர், யெலஹங்கா, கர்னூல் வழியாகவும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img