December 6, 2025, 4:42 AM
24.9 C
Chennai

சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!

பங்குனி உத்திரம் ஆராட்டு விழாவிற்காக, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு, ஐயனின் திருநடையில் மேல்சாந்தி நெய்தீபம் ஏற்றிவைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

புகழ் பெற்ற சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், 19 நாட்கள் தரிசனத்திற்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நாளை புதன்கிழமை ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் சபரிமலை ஐயப்பனுக்கு பகலில் உற்ஸவ பலி பூஜை, உற்ஸவ பலி தரிசனம் நடைபெறும். இரவு ஸ்ரீ பூதபலி பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் திருநாள் அன்று ஐயப்பன் பள்ளி வீட்டை, பத்தாவது திருநாள் அன்று ஐயப்பன் பிறந்தநாளில் பங்குனி உத்திர ஆராட்டு விழா பம்பை நதிக்கரையில் நடைபெறும்.

முக்கிய விழாவான சித்திரை விஷூத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷூ திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ் மாதத்தின் சித்திரை, மலையாள மாதத்தின் இடவம் மாதங்களின் மாதாந்திர பூஜை ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி, ஏப்ரல் 11ம் தேதி பங்குனி உத்திர சிறப்பு பூஜையும், ஐயப்பனுக்கு பம்பையில் ஆராட்டும், ஏப்ரல் 14ம் தேதி பூஜையும் நடக்கிறது. இந்த பூஜைகளுக்காக, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இதற்காக தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது.

பக்தர்கள், https://sabarimalaonline.org/ என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் டோர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்தது முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பம்பை நதியிலும் ஓரளவு தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக சபரிமலை வனப்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடும் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி எடுத்தது. மரங்களின் இலைகள் எல்லாம் உதிர்ந்து, பசுமையான வனம் கருகிய வனமாக காட்சி அளித்து வருகிறது. இந்த மழையில் பசுமை மீண்டும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

தற்போது கேரளாவில் இலையுதிர் காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த மரங்களில் இலைகள் எல்லாம் உதிர்ந்து, கருகிய வனமாகக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories