April 19, 2025, 2:35 AM
30 C
Chennai

சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!

பங்குனி உத்திரம் ஆராட்டு விழாவிற்காக, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு, ஐயனின் திருநடையில் மேல்சாந்தி நெய்தீபம் ஏற்றிவைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

புகழ் பெற்ற சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், 19 நாட்கள் தரிசனத்திற்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நாளை புதன்கிழமை ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் சபரிமலை ஐயப்பனுக்கு பகலில் உற்ஸவ பலி பூஜை, உற்ஸவ பலி தரிசனம் நடைபெறும். இரவு ஸ்ரீ பூதபலி பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் திருநாள் அன்று ஐயப்பன் பள்ளி வீட்டை, பத்தாவது திருநாள் அன்று ஐயப்பன் பிறந்தநாளில் பங்குனி உத்திர ஆராட்டு விழா பம்பை நதிக்கரையில் நடைபெறும்.

முக்கிய விழாவான சித்திரை விஷூத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷூ திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ் மாதத்தின் சித்திரை, மலையாள மாதத்தின் இடவம் மாதங்களின் மாதாந்திர பூஜை ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது.

ALSO READ:  குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

இதையொட்டி, ஏப்ரல் 11ம் தேதி பங்குனி உத்திர சிறப்பு பூஜையும், ஐயப்பனுக்கு பம்பையில் ஆராட்டும், ஏப்ரல் 14ம் தேதி பூஜையும் நடக்கிறது. இந்த பூஜைகளுக்காக, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இதற்காக தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது.

பக்தர்கள், https://sabarimalaonline.org/ என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் டோர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்தது முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பம்பை நதியிலும் ஓரளவு தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக சபரிமலை வனப்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடும் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி எடுத்தது. மரங்களின் இலைகள் எல்லாம் உதிர்ந்து, பசுமையான வனம் கருகிய வனமாக காட்சி அளித்து வருகிறது. இந்த மழையில் பசுமை மீண்டும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

தற்போது கேரளாவில் இலையுதிர் காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த மரங்களில் இலைகள் எல்லாம் உதிர்ந்து, கருகிய வனமாகக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories