April 23, 2025, 7:21 PM
30.9 C
Chennai

சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!

பங்குனி உத்திரம் ஆராட்டு விழாவிற்காக, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு, ஐயனின் திருநடையில் மேல்சாந்தி நெய்தீபம் ஏற்றிவைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

புகழ் பெற்ற சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், 19 நாட்கள் தரிசனத்திற்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நாளை புதன்கிழமை ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் சபரிமலை ஐயப்பனுக்கு பகலில் உற்ஸவ பலி பூஜை, உற்ஸவ பலி தரிசனம் நடைபெறும். இரவு ஸ்ரீ பூதபலி பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் திருநாள் அன்று ஐயப்பன் பள்ளி வீட்டை, பத்தாவது திருநாள் அன்று ஐயப்பன் பிறந்தநாளில் பங்குனி உத்திர ஆராட்டு விழா பம்பை நதிக்கரையில் நடைபெறும்.

முக்கிய விழாவான சித்திரை விஷூத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷூ திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ் மாதத்தின் சித்திரை, மலையாள மாதத்தின் இடவம் மாதங்களின் மாதாந்திர பூஜை ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது.

ALSO READ:  IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்

இதையொட்டி, ஏப்ரல் 11ம் தேதி பங்குனி உத்திர சிறப்பு பூஜையும், ஐயப்பனுக்கு பம்பையில் ஆராட்டும், ஏப்ரல் 14ம் தேதி பூஜையும் நடக்கிறது. இந்த பூஜைகளுக்காக, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இதற்காக தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது.

பக்தர்கள், https://sabarimalaonline.org/ என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் டோர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்தது முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பம்பை நதியிலும் ஓரளவு தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக சபரிமலை வனப்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடும் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி எடுத்தது. மரங்களின் இலைகள் எல்லாம் உதிர்ந்து, பசுமையான வனம் கருகிய வனமாக காட்சி அளித்து வருகிறது. இந்த மழையில் பசுமை மீண்டும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

தற்போது கேரளாவில் இலையுதிர் காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த மரங்களில் இலைகள் எல்லாம் உதிர்ந்து, கருகிய வனமாகக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஏப்.7ல் திட்டமிட்டபடி தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! நீதிமன்ற தடை நீக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories