ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு!

kumbakonam adhikumbeswarar arudra - 2026

கும்பகோணத்தில் ஸ்ரீஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவ விழா நடைபெற்றது.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும் உலகப் புகழ்பெற்ற மகாமகத் பெருவிழாவின் பிரதான திருக்கோயிலாகவும் விளங்கக்கூடியது ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்! ஆருத்ரா தரிசன விழாவின்போது இங்கு நடைபெறும் 12 சிவாலய ஸ்ரீநடராஜ பெருமான் சந்திப்பு உற்சவத்தாலும் மேலும் சிறப்பு பெறுகிறது

சிவாலயங்களில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருவாதிரையன்று இரவு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதிகாலையில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் சென்னையில் நவ நடராஜர் சந்திப்பு உற்சவமும் அச்சிறுப்பாக்கம் மற்றும் மயிலாடுதுறையில் பஞ்ச நடராஜர் சந்திப்பு உற்சவமும் மன்னார்குடியில் ஸப்த(ஏழு) நடராஜர் சந்திப்பு உற்சவமும் என தமிழகத்தில் சில முக்கிய தலங்களில் மட்டுமே திருவாதிரை உற்சவத்தின்போது இந்த நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெறுகிறது

ஆனால் கும்பகோணத்தில் மட்டுமே 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெறுகிறது.

நாதத்திற்கும் நடனத்திற்கும் தலைவனாகிய ஸ்ரீநடராஜ பெருமானை வழிபடுவோர் வாழ்க்கையானது ஆனந்தமயமான நிலையை கொண்டிருக்கும். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சிவாலய நடராஜரை தரிசிப்பது அனேக நலன்களை தருவிக்கும்

இவ்வருட ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில், நேற்று சிறப்பு ஹோமத்துடன் திருக்கோயில் அலங்கார மண்டபத்தில் ஸ்ரீசிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது காலை 7 மணி அளவில் இந்திர விமானத்தில் ஸ்ரீசிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜப் பெருமானின் இரட்டை வீதி உலா நடைபெறுகிறது!

தொடர்ந்து கும்பேஸ்வரர் கீழ ரதவீதியில் நாகேஸ்வரர் கோயில் காசி விஸ்வநாதர் கோவில் கௌதமேஸ்வரர் கோவில் பாணபுரீஸ்வரர் கோவில் சோமேஸ்வரர் கோவில் அபிமுகேஸ்வரர் கோவில் கோடீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளிட்ட (தேரடி அருகில்) 12 சிவாலய நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது

இவ்வைபவத்தில் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் நடராஜப் பெருமான் கீழரத வீதியில் கிழக்கு நோக்கி எழுந்தருள, கும்பகோணத்திலுள்ள மகாமகம் தொடர்புடைய இதர பதினோரு சிவாலய ஸ்ரீநடராஜ மூர்த்திகள், ஸ்ரீஆதிகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலை இரட்டை வீதியாக வலம் வந்து கீழ ரத வீதியை அடைந்த பிறகு, ஸ்ரீஆதிகும்பேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் நடராஜ பெருமானுடன் சந்திப்பு வைபவமும் மரியாதை சம்பிரதாயங்களும் நடைபெறும்.!

இக்காட்சியை பக்தர்கள் அனைவரும் பரவசத்துடன் தரிசித்து வழிபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories