December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு!

sringeri patasala sengottai - 2025

செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு நேரலையில் வெப்காஸ்ட் செய்யப் படுகிறது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு – நடைபெற்று வருகிறது.

இது குறித்து செங்கோட்டை ஸ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ராமசந்திரன் கூறியபோது…

ஸ்ரீ சாரதாம்பாளின் அருளாலும், ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரரின் அருளாலும் நம் ஸ்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சன்னிதானம் ஸ்வாமிகள் அனுக்ரஹத்தாலும், செங்கோட்டையில், ஸ்ரீ பாரதி தீர்த்த பாடசாலையில், மார்ச் 24 ம் தேதி நமது முதலாவது ‘வேதாங்க பரிச்சய சம்மேளனம்’ (மாநாடு) நடைபெற்று வருகிறது.

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் முல்லைவாசல் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் இதற்குத் தலைமை தாங்குகிறார்.

தஞ்சாவூரில் இயங்கும் இந்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தெற்கு மண்டலப் பாரம்பரிய மையத்தின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது.

இந்த மாநாடு “ஷடங்கம்” என்பது வேதங்களின் ஆறு அங்கங்களைக் குறிக்கிறது. வேதங்களுக்கு அடுத்து இவையே நமக்கு முக்கியமானவை. ஹிந்து மதத்தின் அடிப்படை !

ஷட் என்றால் ஆறு. வேதம் ஆறு அங்கங்களைக் கொண்டவை. அவையே ஷ்ட் அங்கம் எனப் படும். அவை:

சீக்ஷா – அக்ஷரங்கள் – வேத புருஷனின் மூக்கு
வ்யாகரணம் – இலக்கணம் – வேத புருஷனின் வாய்
ந்ருக்தம் – அகராதி – வேத புருஷனின் காது
கல்பம் – சடங்குகளின் கையேடு – வேத புருஷனின் கை
சந்தஸ் – யாப்பு/சந்தம் – வேத புருஷனின் பாதம்
ஜ்யோதிஷம் – ஜோதிடம் – வேத புருஷனின் கண்
மேலும், மீமாம்ஸா மற்றும் தர்ம சாஸ்திரம் ஆகியவை குறித்த அறிமுகம் இந்த மாநாட்டில் சொல்லப் பட்டு வருகிறது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்மேளனம் சமீப காலங்களில் இப்போதுதான் முதல்முறையாக நடத்தப்படுகிறது. எங்கள் பாடசாலை நடத்தும் முதல் பெரிய சம்மேளனம் இதுதான்.

இந்த சம்மேளனத்தின் நோக்கம் என்ன?

ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகளின் உத்வேகமூட்டும் வார்த்தைகளில் சொல்வதென்றால், முன்பைப் போல பெரும்பாலான பாடசாலைகளில் சடங்கம் பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகளின் அறிவுறுத்தலின் படி, முதல்முறையாக, ஷடங்கம் பற்றிய பாடத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.

வழக்கமான வேத பாடத்துடன் (ஸ்வ ஷாகை) அனைத்து வித்யார்த்திகளுக்கும் ஆச்சாரியர்களுக்கும், ஷடங்கம் நம் பாடசாலையில் கற்றுத் தரப்படும்.

இதைப் படித்துப் பட்டம் வாங்கும் வித்யார்த்திகள் ஷடங்க விற்பன்னர்களாக வருவார்கள் என்று நம்புகிறோம். இதற்கான தொடக்கமே இந்த சம்மேளனம்.

இந்த சம்மேளனத்தின் நேரடி இணைய ஒளிபரப்பை…  http://live.3draddanvmedia.in என்பதில் காணலாம்.

வேதம் கற்க இப்படி ஒரு வாய்ப்பு செங்கோட்டையில் ஸ்ரீ பாரதி தீர்த்த பாடசாலையில் உள்ளது என்பது இங்குள்ள வைதீகர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியட்டும். https://sbtveda.com, https://sbtveda.com/vedanga.html என்ற தளங்களிலும் தகவல்கள் பெறலாம். 9840267321 என்ற எண்ணிலும், ramachandran.m@sbtveda.com என்ற இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம். .. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories