செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு!

sringeri patasala sengottai - 2026

செங்கோட்டையில் நடைபெறும் முதலாம் வேதாங்க மாநாடு நேரலையில் வெப்காஸ்ட் செய்யப் படுகிறது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஸ்ரீ பாரதீ தீர்த்த பாடசாலையில் முதலாவது வேதாங்க பரிசய மாநாடு – நடைபெற்று வருகிறது.

இது குறித்து செங்கோட்டை ஸ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ராமசந்திரன் கூறியபோது…

ஸ்ரீ சாரதாம்பாளின் அருளாலும், ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரரின் அருளாலும் நம் ஸ்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சன்னிதானம் ஸ்வாமிகள் அனுக்ரஹத்தாலும், செங்கோட்டையில், ஸ்ரீ பாரதி தீர்த்த பாடசாலையில், மார்ச் 24 ம் தேதி நமது முதலாவது ‘வேதாங்க பரிச்சய சம்மேளனம்’ (மாநாடு) நடைபெற்று வருகிறது.

சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் முல்லைவாசல் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் இதற்குத் தலைமை தாங்குகிறார்.

தஞ்சாவூரில் இயங்கும் இந்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தெற்கு மண்டலப் பாரம்பரிய மையத்தின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

இந்த மாநாடு “ஷடங்கம்” என்பது வேதங்களின் ஆறு அங்கங்களைக் குறிக்கிறது. வேதங்களுக்கு அடுத்து இவையே நமக்கு முக்கியமானவை. ஹிந்து மதத்தின் அடிப்படை !

ஷட் என்றால் ஆறு. வேதம் ஆறு அங்கங்களைக் கொண்டவை. அவையே ஷ்ட் அங்கம் எனப் படும். அவை:

சீக்ஷா – அக்ஷரங்கள் – வேத புருஷனின் மூக்கு
வ்யாகரணம் – இலக்கணம் – வேத புருஷனின் வாய்
ந்ருக்தம் – அகராதி – வேத புருஷனின் காது
கல்பம் – சடங்குகளின் கையேடு – வேத புருஷனின் கை
சந்தஸ் – யாப்பு/சந்தம் – வேத புருஷனின் பாதம்
ஜ்யோதிஷம் – ஜோதிடம் – வேத புருஷனின் கண்
மேலும், மீமாம்ஸா மற்றும் தர்ம சாஸ்திரம் ஆகியவை குறித்த அறிமுகம் இந்த மாநாட்டில் சொல்லப் பட்டு வருகிறது.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்மேளனம் சமீப காலங்களில் இப்போதுதான் முதல்முறையாக நடத்தப்படுகிறது. எங்கள் பாடசாலை நடத்தும் முதல் பெரிய சம்மேளனம் இதுதான்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இந்த சம்மேளனத்தின் நோக்கம் என்ன?

ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகளின் உத்வேகமூட்டும் வார்த்தைகளில் சொல்வதென்றால், முன்பைப் போல பெரும்பாலான பாடசாலைகளில் சடங்கம் பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஸ்ரீ மஹாசன்னிதானம் ஸ்வாமிகளின் அறிவுறுத்தலின் படி, முதல்முறையாக, ஷடங்கம் பற்றிய பாடத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.

வழக்கமான வேத பாடத்துடன் (ஸ்வ ஷாகை) அனைத்து வித்யார்த்திகளுக்கும் ஆச்சாரியர்களுக்கும், ஷடங்கம் நம் பாடசாலையில் கற்றுத் தரப்படும்.

இதைப் படித்துப் பட்டம் வாங்கும் வித்யார்த்திகள் ஷடங்க விற்பன்னர்களாக வருவார்கள் என்று நம்புகிறோம். இதற்கான தொடக்கமே இந்த சம்மேளனம்.

இந்த சம்மேளனத்தின் நேரடி இணைய ஒளிபரப்பை…  http://live.3draddanvmedia.in என்பதில் காணலாம்.

வேதம் கற்க இப்படி ஒரு வாய்ப்பு செங்கோட்டையில் ஸ்ரீ பாரதி தீர்த்த பாடசாலையில் உள்ளது என்பது இங்குள்ள வைதீகர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியட்டும். https://sbtveda.com, https://sbtveda.com/vedanga.html என்ற தளங்களிலும் தகவல்கள் பெறலாம். 9840267321 என்ற எண்ணிலும், ramachandran.m@sbtveda.com என்ற இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம். .. என்றார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories